Sunday, July 3, 2016

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவில் தீ கணினிகள் எரிந்து நாசம்

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவில் தீ

கணினிகள் எரிந்து நாசம்

 பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட ஆய்வுகூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், அந்தப் பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவம் பொறியியல் பிரிவில் நேற்று இரவு 8.10 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்த கண்டி மாநகர சபையின் தீயணைப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுளள்னர்.
இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளுக்காக இரசாயன பகுப்பபாய்வாளர்களை அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் விஜேபால தெரிவித்துள்ளார்.
மின் ஒழுக்கினால் இந்த விபத்து சம்பவித்திருக்கலாம் என சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்தினால் 30 இற்கும் அதிகமான கணினிகள் அழிவடைந்துள்ளதாகவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment