Wednesday, August 31, 2016

போராட்டக்காரர்கள் - பாதுகாப்பு படையினர் மோதல் 15 வயது சிறுவன் பலி ஆறுபேர் காயம்

போராட்டக்காரர்கள் - பாதுகாப்பு படையினர் மோதல்
15 வயது சிறுவன் பலி ஆறுபேர் காயம்

ஜம்மு-காஷ்மீரில் இன்று போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மோதலில் 15 வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் பலியானான்.
காஷ்மீரில் உள்ள சோபோர் நகரின் அருகேயுள்ள லோடோரா பகுதியில் இன்றுகாலை போராட்டக்காரர்களுக்கும் போராட்டத்தை அடக்கச் சென்ற பாதுகாப்பு படையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.

போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்கினர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறுபேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை சோபோரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றபோது டனிஷ் மன்சூர் என்ற 15 வயது சிறுவன் வழியிலேயே உயிரிழந்தான்.


டனிஷ் மன்சூருடன் சேர்த்து கடந்த 54 நாட்களாக காஷ்மீரில் நடந்துவரும் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment