Tuesday, August 30, 2016

ஜனாதிபதியின் இணையத்தளத்தை முடக்கிய மற்றுமொருவர் கைது!

ஜனாதிபதியின் இணையத்தளத்தை முடக்கிய
மற்றுமொருவர் கைது!



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையதளத்தை முடக்கிய மற்றுமொருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று (செவ்வாய்க்கி ழமை) கைதுசெய்துள்ளனர்.

மொறட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மீதான விசாரணைகளையடுத்து அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, நேற்றையதினம் கடுகண்ணாவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவன் ஒருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறி ப்பிட த்தக்கது.


சந்தேகநபர்கள் இரண்டு முறை ஜனாதிபதியின் இணையதளத்திற்குள் ஊடுருவி தரவுகளை மாற்றியமைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், குறி த்த இணையதளம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment