Friday, September 30, 2016

இரவானால் அச்சத்தில் மூழ்கும் ஏறாவூர்; இரட்டைப் படுகொலையின் எதிரொலி


இரவானால் அச்சத்தில் மூழ்கும் ஏறாவூர்;

இரட்டைப் படுகொலையின் எதிரொலி

புங்குடுதீவு மாணவி வித்தியா,சிறுமி சேயா போன்றவர்களின் பாலியல் வல்லுறவுக் கொலைச் சம்பவங்கள் முழு இலங்கையையும் உலுக்கியதை நாம் அறிவோம்.அந்த வரிசையில் இப்போது இணைந்துள்ளது ஏறாவூர் இரட்டைப் படுகொலை சம்பவம்.

புனித ஹஜ் பெருநாளைக்கு முதல் தினமான அரபா நோன்பு தினம் 11-09-2016 அன்று இந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டு முழு ஊரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அன்றைய தினம் நள்ளிரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாயும் மகளும் கொடூரமானமுறையில் அடித்துக் கொல்லப்பட்ட செய்தி மறுநாள் நன்பகள்தான்  அயல் வீட்டாருக்கே தெரிய வந்தது;ஊரை அச்சத்தில் மூழ்கடித்தது.

கொலை செய்யப்பட்ட மகளின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்ததால் அந்தத் தாயும் மகளும்தான் வீட்டில் வசித்து வந்தனர்.இந்தச் சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொண்ட கொலையாளிகள் வீட்டின் கூரையைப் பிரித்து உள்ளே ங்கி இந்தக் கொலையைப் புரிந்துள்ளனர்.

பொலிஸாரின் தீவிர வேட்டையாலும் ஊர் மக்களின் ஒத்துழைப்பாலும் கொலை இடம்பெற்று ஒரு வாரத்தில் சந்தேகநபர்கள் பிடிபட்டனர்;விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.விசாரணைகள் தொடர்கின்றன.

இந்தக் கொலை ஒரு குடும்பத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமையாக அல்லாது முழு ஊருக்கும் இழைக்கப்பட்ட கொடுமையாக ஊர் மக்கள் கருதுவதால் கொலையாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்கும்வரை இதில் இருந்து பின்வாங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் மக்கள் உள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட அன்றைய தினமும் கடந்த வாரம் வியாழக் கிழமையும் ஊர் மக்கள் கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்தினர்.கடந்த வாரம் நடத்தப்பட்ட கடையடைப்பு மற்றும் மனிதச் சங்கிலி போராட்டம் ஊர் மக்கள் இந்த விடயத்தில் எவ்வளவு தூரம் அக்கறையுடன் இருக்கின்றனர் என்பதையும் ஒவ்வொருவரும் தங்களின் பிரச்சினைகளாகவே இதை பார்க்கின்றனர் என்பதையும் வெளிக்காட்டின.

ஹர்த்தால் என்றால் பொதுவாக பிரதான வீதிகளில்-பஸார்களில் இருக்கும் கடைகள் மாத்திரமே  பூட்டப்படுவது வழமை.ஆனால்,இந்த ஹர்த்தாலின்போது மூலை முடுக்குகளில் உள்ள கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு மக்கள் பூரண ஒத்துழைப்பை இந்த ஹர்த்தாலுக்கு வழங்கினர்.அது மாத்திரமன்றி பெண்களும் பதாதைகளை ஏந்தியவாறு இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டங்கள் எவையும் பொலிஸாருக்கு எதிரானதாக இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கொலையாளிகளுக்கு மரண தண்டனையையும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பையும் பெற்றுக்கொடுப்பதே இந்தப் போராட்டத்தின் நோக்கமாக இருந்தது.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதால் இறுதி முடிவை மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கொலையாளிகளுக்கு சாதகமாக அமையும் என்றால் அதற்கு எதிரான நடவடிக்கையை எடுப்பதற்கும் மக்கள் தயாராக இருக்கின்றனர்.

இந்தக் கொலை இடம்பெற்று 20 நாட்கள் ஆகின்றபோதிலும்,ஏறாவூர் இன்னும் அச்சத்தில் இருந்து விடுபடவில்லை.இரவானால் ஒருவகையான அச்சம் முழு ஊரையும் ஆட்கொண்டுவிடுகின்றது.ஆண் துணை இல்லாமல் வாழும் பெண்கள் வீட்டில் தனியாகத் தூங்குவதற்கு அச்சப்படுகின்றனர்.

நான்கைந்து வீடுகளில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து ஒரு வீட்டில் தூங்குகின்றனர்.தமது மனைவிமாரை-குழந்தைகளை தனியாக விட்டு வெளிநாடுகளில் தொழில்புரியும் ஆண்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்க கொண்டுதான் வாழ்கின்றனர்;நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.நடுநிசியில் தங்களின் வீடுகளுக்குத் தொலைபேசி அழைப்புகளை எடுத்து நிலைமையை விசாரிக்கின்றனர்.வீட்டுக்கு வெளியே ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று தேடுகின்றனர்.

வெளிநாடுகளில்-வெளி ஊர்களில் தொழில்புரியும் தங்களது தந்தைமார்களை அவர்களது குழந்தைகள் வீட்டுக்கு வருமாறு கதறி அழைக்கின்றனர்.தொழிலை விட்டுவிட்டு வீடுகளில் வந்து இருக்குமாறு கேற்கின்றனர்.மாலை ஆறு மணியானதும் ஆண்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதற்கு வீட்டுப் பெண்கள் அனுமதிப்பதில்லை.

நடுநிசியில் நாய்கள் சாதாரணமாகக் குறைத்தாலும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் விழிப்படைந்துவிடுகின்றனர்.ஆள் நடமாட்டத்தைப் பார்த்துத்தான் இவ்வாறு குறைக்கின்றதோ என்று அஞ்சுகின்றனர்.விடிந்ததும் எல்லா வேலைகளையும் வைத்து விட்டு அந்த நாய்கள் குறைத்ததற்கான காரணத்தையே தேடுகின்றனர்.

இவ்வாறு ஏறாவூர் மக்கள் ஒவ்வொரு இரவையும் அச்சத்துடனேயே கழிக்கின்றனர்.இதுபோக,அவ்வப்போது பரவுகின்ற வதந்தியால் அச்சம் மேலோங்கிக் காணப்படுகின்றது.

ஒவ்வொருத்தரும் தங்கள் பெண்களின் பாதுகாப்புப் பற்றியே கவலைப்படுகின்றனர்.மிகவும் சன நெருக்கடிமிக்க-பிரதான வீதியை அண்டிய இடத்தில் இந்தக் கொலை இடம்பெற்றிருப்பதால் சன நெருக்கடி இல்லாத இடத்தில் வாழும் மக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்கின்றனர்.

கொலைச் சந்தேகநபர்களை கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்புக் கமராவே காட்டிக் கொடுத்திருப்பதால் சிலர் வீடுகளுக்கும் கடைகளுக்கும் பாதுகாப்புக்கு கமராவைப் பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.சிலர் வேறு வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் யோசிக்கின்றனர்.

இவ்வாறு தொடர்ந்தும் ஒரு ஊர் அச்சத்தில் மூழ்கி இருப்பது ஆரோக்கியமான விடயம் அல்ல.குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கும்வரை இந்த அச்சம் நீடிக்கும் என்பது உறுதி.

பணத்தாலோ அல்லது சட்டத்தரணிகள் திறமையான வாதத்தாலோ குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவார்களேயானால் ஊரின் நிலைமை மிக மோசமாக அமைந்துவிடும் என்பதும் உறுதி.

குற்றவாளிகளின் விடுதலையானது ஊருக்கு மேலும் ஆபத்தை ஏற்படுத்தக்க்கூடியதாகவோ அல்லது அந்தக் குற்றவாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகவோ அமையலாம்.ஊர் மக்களின் பொதுவான கருத்து இவ்வாறுதான் இருக்கின்றது.

ஆகவே,சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும்.மக்கள் சட்டத்தைக் கையினுள் எடுக்கும் மோசமான நிலைமையை சட்டம் செய்துவிடக்கூடாது.எல்லாவற்றுக்கும் மேலாக,இவ்வாறான குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது மாத்திரமன்றி அது நிறைவேற்றப்பட்ட வேண்டும் என்ற மக்களின் நிலைப்பாடு மேலோங்கி இருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

இவ்வாறான பாலியல் வல்லுறவு மற்றும் கொலைகள் இடம்பெறுகின்றபோது மாத்திரம் அனைவரும் அனைவரும் இஸ்லாமிய சட்டத்தின் தேவை பற்றி உணருகின்றனர்.அந்தத் தண்டனைதான் தேவை என்று கூக்குரல் இடுகின்றனர்;பின்பு மறந்துவிடுகின்றனர்.

இது நம் எல்லோருக்கும் பொதுவான பிரச்சினை என்று உணர்ந்து மக்கள் எல்லோரும் ஒத்த நிலைப்பாட்டை எடுப்பார்களேயானால்-அரசுக்கு பாரிய அழுத்தத்தை கொடுப்பார்களேயானால் மரண தண்டனையை நிறைவேற்றுவதை அரசு சட்டமாக்கக்கூடும்.

மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றது என்றால்-அதுவும் விரைவாக நிறைவேற்றப்படுகின்றது என்றால் நாட்டில் குற்றங்கள் வெகுவாகக் குறையும்.மக்கள்-நாங்கள் இவ்வாறான ஆபத்துக்களில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழலாம்.கடுமையான தண்டனைதான் குற்றங்களைக் குறைக்கும் என்ற கருத்து என்றைக்குமே பொய்க்காது.

 [ எம்..முபாறக் ]








இந்தியாவின் தாக்குதலால் எல்லையில் பதற்றம் பாகிஸ்தான் அமைச்சரவை அவசர ஆலோசனை


இந்தியாவின் தாக்குதலால் எல்லையில் பதற்றம்

பாகிஸ்தான் அமைச்சரவை அவசர ஆலோசனை


ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு பிராந்தியத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள பலூரா கிராமத்தில் இருந்து குதிரை வண்டி மூலம் வெளியேறும் கிராமத்தினர்.



இந்தியாவின் தாக்குதலால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதையொட்டி பாகிஸ்தான் அமைச்சரவை அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. அதில் பேசிய பிரதமர் நவாஸ் ஷெரீப், “தாய்நாட்டை காப்போம்என கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள், காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாமில் கடந்த மாதம் 18-ந் திகதி அதிரடித் தாக்குதல்கள் நடத்தி 19 வீரர்களை கொன்றனர். இது இந்தியா முழுவதும், அந்த நாட்டின் மீது கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, இந்திய ராணுவத்தின் கமாண்டோக்கள் அங்கு விரைந்து, 28-ந் திகதி நள்ளிரவு தொடங்கி 29-ந் திகதி அதிகாலை வரையில் தாக்குதல்கள் தொடுத்தனர். இதில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 38 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டின் சிப்பாய்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல்கள் பற்றி, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகள் பிரிவின் தலைமை இயக்குனரை, இந்திய ராணுவ நடவடிக்கைகள் பிரிவின் தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் தொடர்பு கொண்டு, எடுத்துக்கூறியுள்ளார்.
இந்தியாவின் அதிரடி தாக்குதலால் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைச்சரைவையின் அவசர கூட்டத்தை பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று கூட்டினார். இதில் எல்லை நிலவரம், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

இந்த கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் பேசினார். அப்போது அவர்,
 “எந்தவொரு தாக்குதலுக்கு எதிராகவும் நாம் நமது தாய்நாட்டை காப்போம். நமது பாதுகாப்பு படையினருடன் ஒட்டுமொத்த நாடும் தோளோடு தோள் சேர்ந்து நிற்கிறதுஎன கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “காஷ்மீர், தேசப்பிரிவினையில் முடிவுக்கு வராத விவகாரம். அதை அப்படியே விட்டு விட முடியாது. இந்தியாவின் வன்கொடுமைகள், காஷ்மீரி மக்களின் பேரார்வத்தை ஒடுக்கி விட முடியாதுஎன கூறினார்.

அத்துடன், “வறுமை, வேலை இல்லா திண்டாட்டம் ஆகியவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நாட்டின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு சமாதானம் அவசியம், ஆனால் பகைமை என்று வருகிறபோது, நாடு பாதுகாக்கப்படவேண்டும்என கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “இந்தியா வலிய வந்து நடத்திய தாக்குதல், பிராந்திய அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எந்த வடிவத்தில் இந்தியாவில் ஆக்கிரமிப்பு வந்தாலும், அதை முறியடிப்பதற்கு தலைமையும், பாகிஸ்தான் மக்களும் ஒன்றுபட்டு நிற்கின்றனர்எனவும் கூறினார்.

எல்லை பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மீது இந்தியா துல்லியமான தாக்குதல்கள் நடத்தியதை பாகிஸ்தான் அமைச்சரவை நிராகரித்தது. மாறாக, இந்தியா எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதில் பாகிஸ்தான் சிப்பாய்கள் 2 பேர் உயிரிழந்தாகவும் கூறியது. மேலும், இரு தரப்பு உடன்பாடுகள் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி, இந்தியா செயல்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை குற்றம் சாட்டியது.

அமைச்சரவை கூட்டத்துக்கு முன்னதாக இந்தியாவின் தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், “பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் எந்தவொரு நிகழ்வையும் சந்திக்க தயாராக உள்ளதுஎன்று கூறினார்.


இதற்கிடையே பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அன்வர் ஜமீர் ஜமாலி, வரும் 21-23 திகதிகளில் இந்தியாவில் நடக்க உள்ள உலகளாவிய மாநாட்டில் பங்கேற்க இருந்த பயணத்தை ரத்து செய்து விட்டார். தற்போதைய சூழலை அவர் காரணம் காட்டி உள்ளார்.

கல்முனை அபிவிருத்தி திட்டம் 120 நாட்கள் – 75 நாட்கள் = 45 நாட்கள் மாத்திரமே கல்முனைப் பிரதேச மக்கள் தெரிவிப்பு!


கல்முனை அபிவிருத்தி திட்டம்

ரூ 500 மில்லியன் . 4 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும்

120 நாட்கள் 75 நாட்கள் = 45 நாட்கள் மாத்திரமே

கல்முனைப் பிரதேச மக்கள் தெரிவிப்பு!


நான்கு மாதங்களுக்குள் 500 மில்லியனில் கல்முனை புதிய நகர் அபிவிருத்தி திட்டம் ஜூலை 15 முதல் தொடக்கம் என மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது..
அதுமாத்திரமல்லாமல் ரூ 500 மில்லியனை . கல்முனை புதிய நகர் அபிவிருத்திக்காக 4 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்றும் மக்களுக்கு கூறப்பட்டிருந்தது.
கல்முனை புதிய நகர் அபிவிருத்தி திட்டம் ஜூலை 15 முதல் தொடக்கம் என செய்தி வெளியாகியதை அடுத்து கல்முனைப் பிரதேச மக்கள் கல்முனையை அபிவிருத்தி செய்து அழகு படுத்தப்போகின்றார்கள். பொழிவு இழந்து காட்சி தரும் கல்முனை பொதுச் சந்தை மிளிரப் பொகின்றது. எமது மாநகர சபைக்கு நவீன கட்ட்டம் வரப் போகின்றது,கல்முனை மக்கள் மண்டபம் புதுப் பொழிவு பெற்று அழகு பெறப் போகின்றது என்றெல்லாம் மக்கள் சந்தோஷமடைந்தனர்.
ஆனால், கல்முனையில் இடம்பெற்றது அபிவிருத்தி வேலைகள அல்ல நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் மட்டும்தான்!
அந்த உயர் மட்டக்கூட்டம் இடம்பெற்று இன்று நவம்பர் மாதம் முதலாம் திகதி 75 நாட்கள் கடந்துவிட்டன. ரூ 500 மில்லியனை . கல்முனை புதிய நகர் அபிவிருத்திக்காக 4 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்று எமது மக்கள் பிரதிநிதிகளால் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்த்து.
ரூ 500 மில்லியனை செலவழிப்பதற்கு 120 நாட்கள் – 75 நாட்கள் = 45 நாட்கள் மாத்திரமே உள்ளதாக எமது  மக்கள் பிரதிநிதிகளுக்கு கல்முனைப் பிரதேச மக்கள் மீண்டும் நினைவுபடுத்துவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
கல்முனை நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் ஒன்று கடந்த ஜுலை மாதம் 15 ஆம் திகதி  கல்முனை மாநகர சபைக் கட்டடத்தில் நகர திட்டமிடல்,நீர்வளங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் HMM.ஹரிஸ் சுகாதர சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசீம்,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட்,பாராளுமன்ற உறுப்பினர் MIM.மன்சூர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள்,மாநகர சபை முன்னாள் மேயர்,முன்னாள் பிரதி மேயர்,முன்னாள் உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள் உயர் அதிகாரிகள் என பலரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இக்கூட்ட்த்தில் கல்முனை அபிவிருத்தி சம்மந்தமாக பல திட்டங்களைச் செய்யப்போவதாக முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்ட்து.




இதோ இது சம்மந்தமாக -----------

Sarjoon Lafeer  அவர்கள் தனது முகநூலில் வெளியிட்ட பதிவு முக நூல் நண்பர்களின் பார்வைக்கு .........


"கல்முனை நகர அபிவிருத்தி திட்டம் உடன் ஆரம்பம்

முதல் கட்ட நிதி ஒதுக்கீடாக 600 மில்லியன் ஒதுக்கீடு"








தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை புதிய தகவல் அம்பலம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை

புதிய தகவல் அம்பலம்

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும், புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு பாதிப்பு காரணமாக, சென்னை, அப்பல்லோ மருத்துவ மனையில், முதல்வர் ஜெயலலிதா அனுமதிக் கப்பட்டார்; ஒரு வாரத்திற்கு மேலாகியும், அவர் வீடு திரும்பாதது, .தி.மு.க.,வினரிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம், முதல்வர் உடல்நிலை தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவின. இதனால், மாநிலம் முழுவதும் பதற்றம் காணப் பட்டது. இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 'சிகிச்சை காரணமாக, முதல்வருக்கு காய்ச்சல் குணமாகி விட்டது.

'அவசியமான மருத்துவ பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டன. உடல்நலம் சீராகும் வரை, சில நாட்கள், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று செல்லும்படி, முதல்வரிடம் அறிவுறுத்தப் பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் போன்றோர், 'முதல்வரின் உடல்நிலை குறித்து, தெளிவான அறிவிப்பை, அரசு வெளியிட வேண்டும்; அமைச்சர்கள்,
அதிகாரிகளுடன், அவர் பேசுவதாக இருந்தால், அந்த புகைப்படங்களை வெளியிட வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர். ஆனால், நேற்று வரை, முதல்வர் புகைப்படம் வெளியாக வில்லை.

வழக்கம் போல, நேற்று காலை, அரசு அதிகாரி கள், அமைச்சர்கள் மருத்துவமனைக்கு சென்று வந்தனர். இதற்கிடையில், முதல்வருக்கு அளிக் கப்பட்ட சிகிச்சை குறித்து, அதிகாரப் பூர்வமற்றதகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

முதல்வர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தும், அவருக்கு இருந்த காய்ச்சல் குணமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்கப்பட்டது. தொடர்ந்து, இதயத்தின் சீரான இயக்கத்திற்காக, கருவி பொருத்தப்பட்டுள்ளது.

தற்போது, அனைத்து விதமான சிகிச்சை முடிந்து, மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். உடல் நிலை நன்றாக உள்ளது. ஓரிரு நாளில், மருத்துவ கண்காணிப்பு முடிந்து விடும். அதன் பிறகே, அவர் வீடு திரும்புவது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதை உறுதிப்படுத்த அரசு தரப்பும், மருத்துவமனை வட்டாரமும் மறுத்து விட்டன.
முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், வீணை காயத்ரி விசேஷ வழிபாடு நடத்துகிறார். தமிழ்நாடு இசை பல்கலை துணைவேந்தரான அவர், 11ம்தேதி விஜயதசமி அன்று, அம்மன் சன்னிதியில் வீணையை மீட்டி, நோய் தீர்க்கும் ராகம் இசைக்கிறார்.

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி, அ.தி.மு.க.,வினர் பல்வேறு விதமான வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில், வீணை காயத்ரி இந்த வேண்டுதலை நிறைவேற்றுகிறார்.

நோய் தீர்க்கும் ராகம், கீர்த்தனைகளுடன் வீணை மீட்ட, துணை வேந்தர் முடிவு செய்துள் ளார். இவர், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத் தக்கது.

முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய, பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள னர்.பிரான்சில் வசிக்கும் தமிழச்சி என்ற பெண், சமூக வலைதளமான, 'பேஸ்புக்'கில், அவ்வப் போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளி யிட்டு வருகிறார்.நேற்று முன்தினம், ஜெய லலிதா உடல்நிலை தொடர்பாக வதந்தி பரப்பும் வகையில் தகவல்களை வெளியிட்டார்.

இதுகுறித்து, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ராமச்சந்திரன், போலீஸ் கமிஷ னர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி, மத்திய குற்றப் பிரிவு போலீசார், தமிழச்சி மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்; அவரை கைது செய்யவும் முயற்சி எடுத்து வருகின்றனர். மேலும், 'இது போன்று வதந்தி பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப் படும்' என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.


முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற அ.தி.மு.க தொண்டர்கள் அப்பல்லோ மருந்துவமனை வாசலில் பூசணிக்காய் உடைத்தனர்.

அப்பல்லோ மருந்துவமனைக்கு வந்த வெண்ணிற ஆடைநிர்மலா, குமாரி சச்சு