Thursday, September 1, 2016

நாட்டின் மாற்றத்திற்கு இளைஞர்களின் பங்கு அவசியம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன்

நாட்டின் மாற்றத்திற்கு இளைஞர்களின் பங்கு அவசியம்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன்

இலங்கையில் சமாதானம் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் பங்குதாரர்கள் இந்நாட்டின் இளைஞர்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு வந்துள்ள .நாவின் செயலாளர் நாயகம் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க காரியாலயம், மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை காரியாலயம் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலேயே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை ஏற்படுத்தும் செயற்பாட்டில் இந்நாட்டின் இளைஞர்களுக்கு பாரிய பங்களிப்பு செய்ய சந்தர்ப்பம் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது



No comments:

Post a Comment