Monday, October 31, 2016

சிகரெட் விலை அதிகரிப்பு


சிகரெட் விலை அதிகரிப்பு

அனைத்து வகையான சிகரட் விலைகளும் இன்று 1 ஆம் திகதி முதல் அதிகரிப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி குறைந்தபட்சம் 5 ரூபாய் தொடக்கம் ரூபாய் 10 வரை சிகரட் வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள வற் வரி காரணமாகவே இவ்வாறு விலை அதிகரிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி அதிக நுர்வுடைய சிகரட் ஒன்றின் விலை 50 ரூபாய் என இலங்கை புகையிலை நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


அத்தோடு சிகரட் உற்பத்தி வரி அண்மையில் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களுக்கும், ஹிலாரி ஆதரவாளர்களுக்கும் விற்பனை இல்லை!


முஸ்லிம்களுக்கும், ஹிலாரி ஆதரவாளர்களுக்கும்
விற்பனை இல்லை!

முஸ்லிம்களுக்கும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் ஆதரவாளர்களுக்கும் துப்பாக்கி விற்பனை கிடையாது என்று அந்த நாட்டின் துப்பாக்கி விற்பனையகம் வெளியிட்டுள்ள அறிவிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், ஜாக்ஸன் சென்டரில் பால் சாண்ட்லர் என்பவர் துப்பாக்கி விற்பனையகத்தை நடத்தி வருகிறார்.
அந்த நாட்டின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவரது விற்பனையகத்தின் வாயிலில், "முஸ்லிம்களுக்கும், ஹிலாரி கிளிண்டன் ஜனாதிபதி ஆவதை ஆதரிப்பவர்களுக்கும் விற்பனை கிடையாது' என்று எழுதி வைத்துள்ளார்.
மேலும், உள்ளூர் நாளிதழில் அவர் வெளியிட்டுள்ள விளம்பரத்திலும், "நீங்கள் முஸ்லிம், அல்லது ஹிலாரி கிளிண்டனின் ஆதரவாளரா? மன்னிக்கவும், பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் விற்பதை பாதுகாப்பற்றதாகக் கருதுகிறோம்' என்று பால் சாண்ட்லர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்புகள் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளன.
இதுகுறித்து பால் சாண்ட்லர் கூறியதாவது: அமெரிக்கர்கள் ஆயுதம் வைத்திருப்பதை ஹிலாரி கிளிண்டன் விரும்பவில்லை. அவர் ஆட்சிக்கு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்களிடமிருந்து ஆயுதங்களை பறித்து விடுவார். எனவே, அவர் ஆட்சிக்கு வருவதை நான் விரும்பவில்லை.
முஸ்லிம்கள் அமெரிக்காவையும், அமெரிக்கர்களின் வாழ்வியல் முறையையும் பாழ்படுத்த விரும்புகிறார்கள். எனவே அவர்களையும் எனக்குப் பிடிக்காது.
எனவே, கிளிண்டன் ஆதரவாளர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஆயுதம் விற்பனை செய்ய மறுப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்ர் அவர்.
அமெரிக்கச் சட்டப்படி, பொதுச் சேவைகளை அளிப்பதில் மதரீதியிலான பாகுபாட்டைக் கடைப்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்தச் சட்டம் துப்பாக்கி விற்பனைக்குப் பொருந்துமா என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை.

ஏற்கெனவே, ஃபுளோரிடா மாகாணத்தில் "முஸ்லிம்கள் தடை செய்யப்பட்ட பகுதி' என்று அறிவிக்கப்பட்ட விற்பனையகம் மீது அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் வழக்கு தொடர்ந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.



சிமி தீவிரவாதிகள் எனத் தெரிவிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட எட்டு முஸ்லிம் மாணவர்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் அசாதுத்தின் உவைஸ் கோரிக்கை

சிமி தீவிரவாதிகள் எனத் தெரிவிக்கப்பட்டு

 சுட்டுக் கொல்லப்பட்ட எட்டு முஸ்லிம்கள் விவகாரத்தில்

உச்ச நீதிமன்றம் விசாரிக்க  வேண்டும்

அசாதுத்தின் உவைஸ் கோரிக்கை



சிமி தீவிரவாதிகள் எனத் தெரிவிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட எட்டு முஸ்லிம் மாணவர்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்தினால்தான், முழு உண்மைகளும் வெளிவரும் என ஐதராபாத்தில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதேகாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுத்தின் வைஸ் கோரிக்கை விடுத்துள்ளார்
இந்திய மத்தியபிரதேசத்தில்  எட்டு முஸ்லிம் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி அசாதுத்தின் உவைஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
சிமிஅமைப்பைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில், மத்தியபிரதேச உள்துறை மந்திரி கூறுவதற்கும், பொலிஸார் கூறுவதற்கும் இடையே நிறைய முரண்பாடுகள் உள்ளன. அந்த 8 பேரும் ஸ்பூனையே ஆயுதமாக பயன்படுத்தியதாக, உள்துறை மந்திரி கூறியுள்ளார்.
அதிநவீன ஆயுதங்களை வைத்துள்ள தீவிரவாத தடுப்பு படை பொலிஸார், ஸ்பூன் வைத்திருப்பவர்களை பாய்ந்து அமுக்கி விடலாமே? எதற்காக சுட வேண்டும்?
மேலும், கொல்லப்பட்டவர்கள் கைக்கடிகாரம், ஷூ, பெல்ட் ஆகியவற்றை அணிந்துள்ளனர். ஜெயிலில் அந்த பொருட்களுக்கு அனுமதி இல்லாதநிலையில், அங்கிருந்து தப்பியவர்கள் அவற்றை அணிந்து இருந்தது எப்படி? எனவே, இவை எல்லாம் நம்பும்படி இல்லை. சுப்ரீம் கோர்ட்டு விசாரணை  நடத்தினால்தான், முழு உண்மைகளும் வெளிவரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இதனிடையே, சிமிதீவிரரவாதிகள் எனத் தெரிவித்து சுட்டுக் கொல்லப்பட்ட 8 முஸ்லிம்கள் தொடர்பாக, பா.ஜனதாவுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. ‘சிமிதீவிரரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது போலி என்கவுன்ட்டர் அல்ல என்று பொலிஸ் தரப்பில் மத்தியபிரதேச .ஜி. யோகேஷ் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார்.

பொலிஸ் தரப்பில் கூறுவதை நம்ப முடியாது என்றும், இதுபற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் கமல் நாத் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிருந்தா கரத் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஆனால், எதிர்க்கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாகவும், அது பாதுகாப்பு படையினரின் மனஉறுதியை சீர்குலைக்கும் என்றும் பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் நரசிம்மராவ் தெரிவித்துள்ளார்.







பொலிஸார் நடத்திய, 'என்கவுன்டரில் எட்டு முஸ்லிம் மாணவர்கள் சுட்டுக்கொலை!







'சிமி' எனப்படும், இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த, எட்டு முஸ்லிம் மாணவர்கள் பொலிஸார் நடத்திய, 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இஸ்லாமிய மாணவர்களின் நலனுக்கான தொடங்கப்பட்டது, 'சிமி' அமைப்பு. தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்து , 2001ல், இந்த அமைப்பு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது.
தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட, இந்த அமைப்பைச் சேர்ந்த எட்டு மாணவர்கள், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.., ஆட்சி அமைந்துள்ள, மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, சிறை காவலர் ஒருவரை கொலை செய்த வர்கள், மற்றொரு காவலரை பிணையாக பிடித்து வைத்தனர்; பின், 'பெட்ஷீட்'களை பயன்படுத்தி, சிறையின் சுவரில் ஏறி தப்பினர் எனத் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த சில மணி நேரத்தில், சிறையில் இருந்து, 5 கி.மீ., தொலைவில், போபாலின் புறநகர் பகுதியான மலிகேடா பகுதியில் பதுங்கியிருந்த, வர்கள் குறித்து,உள்ளூர் மக்கள் தகவல் கொடுத்தனர்; உடன் பொலிஸார்ர் அவர்களை சுற்றி வளைத்தனர்.அப்போது, இவர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதால், பொலிஸாரும் பதிலுக்கு சுட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது; இதில், எட்டு மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முன்னதாக, போபால் சிறையில் இருந்து, இவர்கள் தப்பிச் சென்றதும், மத்திய பிரதேச பொலிஸார், அவர்களின் புகைப்படங்களை உடனடியாக வெளியிட்டனர்.
அவர்களைப் பற்றி தகவல் தெரிவித்தால், தலா, ஐந்து லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும், அறிவித்தனர்.என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட எட்டு முஸ்லிம் மாணவர்களின் பெயர்கள், அம்ஜத் கான், ஜாகிர் உசேன் சாதிக், முகம்மது சலீக் சாலு, முஜீப் ஷேக், மெக்பூப் குட்டூ மாலிக், முகம்மது காலித்அகமது, அகீல் கில்ஜி, அப்துல் மஜீத் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

'சிமி' உருவானது எப்படி?

ஜமாத் - - இஸ்லாமி - ஹிந்த் என்ற அமைப்பு, அறிஞர்களையும், கல்வியாளர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில், 1977ல் உருவாக்கியது தான், 'சிமி' எனப்படும், இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு.
 இஸ்லாமிய மாணவர்களின் நலனுக்காக, கல்விக்கு உதவுவதற்காக, உத்தர பிரதேசத்தில் தொடக்கப்பட்டது.'இஸ்லாத்தை பாதுகாக்க, ஜிகாத் எனப்படும், புனிதப் போர் தான் வழிமுறை; அதற்காக உயிர் தியாகம் செய்வதே உன்னத தியாகம்' என்பது தான், இந்த அமைப்பின் அடிப்படை கொள்கையாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், பல தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், 2001ல், இந்திய மத்திய அரசு தடை விதித்தது. அதன் பின், இதன் தலைவர்கள் பலர் தலைமறைவாகினர்; சிலர் கைது செய்யப்பட்டனர்.தடை விதிக்கப்பட்ட பின், இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், ஜம்மு - காஷ்மீரில் இயங்கி வரும், சில தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கியதாக, தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவிக்கிறது.





கடினபந்து கிரிக்கெட் போட்டியில் சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி


கடினபந்து கிரிக்கெட் போட்டியில்

சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி

(எஸ்.அஷ்ரப்கான்)

சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் சீருடை அறிமுக நிகழ்வுக்கான சினேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டியில் சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது.

சாய்ந்தமருது கரைவாகு பொது மைதானத்தில் கடந்த 29 ஆம் திகதி  சனிக்கிழமை நடைபெற்ற இச் சினேகபூர்வ போட்டியில் சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டுக் கழகம் மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது பிளைங் ஹொர்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 18 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டுக் கழகம் 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர். போட்டியின் சிறப்பாட்டகாரராக தானு 65 ஓட்டங்களை பெற்றமைக்காக தெரிவானார்.

இந்நிகழ்வில் பொறியியலாளர் பர்ஹான், ஓய்வு பெற்ற அதிபர் ஐ.எல்.ஏ.மஜீத் மற்றும் இக்ரா நிறுவனத்தின் பணிப்பாளர் ஜலால் உட்பட பிரமுகர்களும் விளையாட்டுக்கழகங்களின் முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.


தொலைபேசி, அலைபேசி அழைப்புக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு



தொலைபேசி, அலைபேசி அழைப்புக் கட்டணங்கள்

இன்று முதல் அதிகரிப்பு



15 சதவீத வற் வரி அதிகரிப்பு, இன்று நவம்பர் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு ருகின்றது.

அதற்கிணங்க ​​தொலைபேசி, அலைபேசி அழைப்புக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கின்றன.

80 பொருட்கள் மற்றும் சேவைகள் வற் அதிகரிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அழைப்புக்கட்டணம், தபால் கட்டணம் உள்ளிட்டவை உள்வாங்கப்பட்டுள்ளன.


தொலைபேசி, அலைபேசி அழைப்புக் கட்டணங்களுக்கு அமுல்படுத்தப்படும் 15 சதவீத வற் வரி உள்ளடங்களாக அழைப்புக் கட்டணத்தில் 48 சதவீதம் வரியாக, பாவனையாளர்கள்  செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை மறுதினம் 2-ம் திகதி தூக்கிலிட திகதி நிர்ணயிக்கப்பட்ட மனநோயாளியின் மரண தண்டனைக்கு பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம் தடை


நாளை மறுதினம் 2-ம் திகதி தூக்கிலிட திகதி

நிர்ணயிக்கப்பட்ட மனநோயாளியின் மரண தண்டனைக்கு

பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம் தடை



பாகிஸ்தானில் மிக மனநிலை நாளை மறுதினம் 2-ம் திகதி நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனையை தடுத்து, அந்நாட்டின் உச்சநீதி மன்றம் அவரை காப்பாற்றியுள்ளது.

தற்போது 50 வயதாகும் இம்டாட் அலி என்பவருக்கு கடந்த 2001-ம் ஆண்டு மதபோதகரான  ஆசிரியரைக் கொலை செய்த குற்றத்துக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இம்டாட் அலி, schizophrenia எனப்படும் தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் அவரை தூக்கிலிட கூடாது எனவும் இங்குள்ள மனித உரிமை அமைப்புகள், கோரிக்கை விடுத்து வந்தன.

எனினும், மேற்படி நோயானது பாகிஸ்தான் நீதித்துறை மற்றும் குற்றவியல்சார்ந்த மனநோய் பட்டியலில் இடம்பெறாததால் மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது என பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இதுதொடர்பாக, நடைபெற்ற வழக்கின் தீர்ப்பும் அரசுக்கு சாதகமாகவே அமைந்தது.

இதையடுத்து, நாளை மறுதினம் ( 2-11-2016 ) அன்று அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் திகதி குறித்தது. அரசின் இந்த முடிவை எதிர்த்தும்இம்டாட் அலிக்கு நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனையை ரத்து செய்யக் கோரியும் பாகிஸ்தான் நீதி இயக்கத்தின் சார்பில் அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

தான் செய்த குற்றத்தையும், தனக்கு விதிக்கப்படும் தண்டனையையும் புரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ள ஒருவரை தூக்கிலிட்டுக் கொல்வது என்பது, ஏற்கனவே பாகிஸ்தான் ஒப்புக்கொண்டு, ஒத்துழைப்பதாக கையொப்பமிட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கை சாசனத்தை மீறும் செயலாக அமைந்துவிடும் என இவ்வழக்கின் மனுதாரரான  பாகிஸ்தான் நீதி இயக்கம் குறிப்பிட்டிருந்தது.


இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி மரண தண்டனைக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கின் மறுவிசாரணை நவம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.