Sunday, October 30, 2016

மாணவர்களுக்கு நீதி கோரி யாழ் பல்கலைக்கழக நிர்வாக முடக்க போராட்டம்


மாணவர்களுக்கு நீதி கோரி

யாழ் பல்கலைக்கழக நிர்வாக முடக்க போராட்டம்

யாழ்.பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் அனைத்தையும் மாணவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரையில் மூடுமாறு கோரி யாழ்.பல்கலைகழக வாயில்களை மூடி மாணவர்கள் நிர்வாக முடக்கல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் படுகொலைக்கு நீதிகோரி யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மூடப்பட்டு கல்வி செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் தொடக்கம் நிர்வாக செயற்பாடுகளையும் முடக்குங்கள் எனகோரியே இந்த போராட்டம் இன்றைய தினம் காலை 7.30 மணி தொடக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


இதனால் பல்கலைக்கழகத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு மாணவர்கள் எதிர்ப்பை காட்டி வரும் நிலையில் பல்கலைக்கழக ஊழியர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முடியாத நிலையில் உள்ளனர்.





No comments:

Post a Comment