Sunday, January 29, 2017

சாய்ந்தமருது பிரதான வீதியில் கோர விபத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு! 10 ற்கும் மேற்பட்டோர் படுகாயம்


சாய்ந்தமருது பிரதான வீதியில் கோர விபத்து

3 குழந்தைகள் உயிரிப்பு! 10 ற்கும் மேற்பட்டோர் படுகாயம்

இன்று 2017.01.30 ஆம் திகதி அதிகாலை சாய்ந்தமருது பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூன்று குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதுடன் பெண்கள் உட்பட 10 ற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது. காயமடைந்த்வர்கள். கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கொழும்பிலிருந்து பாலமுனை நோக்கி சென்று கொண்டிருந்த வேன் அக்கரைப்பற்று டிப்போ பஸ்ஸூடன் மோதிய போதே இவ் விபத்து நடந்துள்ளது மரண எண்ணிக்கை அதிகரிக்கலாமென அச்சம் தெரிவிக்கப்படுகிறது!
இந்த வேனில் பயணித்தவகளின் சிலரது உடற்பாகங்கள் குறித்த வேனில் சிதறிக் கிடந்ததாக சம்பவத்தை நேரில் அவதானித்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வேன் விமான நிலையத்திலிருந்து பாலமுனை நோக்கி பயணித்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வேனில் பயணித்தவர்கள், உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்காவுக்கு சென்று வீடு திரும்பிய பாலமுனையை சேர்ந்த குடும்பத்தினர் என தெரிவிக்கப்படுகிறது.

பஸ் சாரதி கைது செய்யப்பட்டிருப்பதுடன் கல்முனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















No comments:

Post a Comment