Tuesday, January 31, 2017

இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் இ அஹமது மாரடைப்பால் மரணம்


இந்திய முன்னாள் மத்திய அமைச்சர்

இ அஹமது மாரடைப்பால் மரணம்

நேற்று நாடாளுமன்ற கூட்டத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் இ அஹமது (வயது 78) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 நேற்று நடந்த இந்திய நாடாளுமன்றக் கூட்டத்  தொடரின் போது இருஅவைகளும் கூடியிருந்தது. அதனைத் தொடர்ந்து, இரு அவைகளுக்கும் பொதுவாக பிரணாப் முகர்ஜி  உரையாற்றிய போது, மதுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலைமணியளவில் உயிரிழந்தார் என அறிவிக்கப்படுகின்றது.

கடந்த மன்மோகன் சிங் அமைச்சரவையில் கேரளாவின் மலப்புரம் மக்களவை தொகுதியில் சார்பில் வெளியுறவுத்துறை மத்திய  இணை அமைச்சராக மது பணியாற்றி வந்தார். இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரும் ஆவார்.


No comments:

Post a Comment