Wednesday, February 1, 2017

குறைந்த மற்றும் மத்திய வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வீட்டு வசதிகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்


குறைந்த மற்றும் மத்திய வருமானம் பெறும் குடும்பங்களுக்காக

வீட்டு வசதிகளை பெற்றுக் கொடுக்கும்

வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு

அமைச்சரவை அங்கீகாரம்


குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் மத்திய வருமானம் பெறும் குடும்பங்கள் ஆகியோருக்காக வீட்டு உரிமையினை பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் 620,000 வீடுகளை 2019ம் ஆண்டில் நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வேலைத்திட்டத்தை உரிய காலத்திற்குள் செய்து முடிப்பதை உறுதி செய்வதற்காக, குறித்த வேலைத்திட்டத்துக்கு தேசிய முன்னுரிமையினை பெற்றுக் கொடுத்து துரிதமாக செயற்படுத்துவதற்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், திறைசேரியின் கீழ் விசேட செயலணி ஒன்றை ஸ்தாபிப்பதற்கும், அச்செயலணிக்காக ஒதுக்கி கொடுக்கப்படுகின்ற அனைத்து இடங்களுக்காகவும் காணி வங்கி ஒன்றை ஸ்தாபிப்பதற்குமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment