Friday, March 31, 2017

முஸ்லிம்களின் சமூக பிரச்சினைகளில் இணைந்து செயல்பட அமைச்சர் ரிஷாத் அமைச்சர் ஹக்கீமுக்கு பகிரங்கஅழைப்பு


முஸ்லிம்களின் சமூக பிரச்சினைகளில் இணைந்து செயல்பட

அமைச்சர் ரிஷாத் அமைச்சர் ஹக்கீமுக்கு பகிரங்கஅழைப்பு



முஸ்லிம்களின் சமூக பிரச்சினைகளில் இணைந்து செயல்பட அமைச்சர் ஹக்கீமுக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
அரச தொலைக்காட்சியில் நேற்று 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு  இடம்பெற்ற  வெளிச்சம் நேரடி நிகழ்ச்சியில்  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த அழப்பினை விடுத்தார்.
ஒரு நேயர் தொலைபேசி மூலமாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது தான் அமைச்சர் ஹக்கீமை பல தடவைகள் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்த போதும் அதற்கு பதில் கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.
இதன் போது நிகழ்ச்சி தொகுப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை முஸ்லிம்களின் சமூக பிரச்சினைகளில் இணைந்து செயல்பட அமைச்சர் ரிஷாத் அமைச்சர் ஹக்கீமுக்கு பகிரங்கமாக இந்த அழைப்பை விடுத்தார்


No comments:

Post a Comment