Saturday, April 29, 2017

ஆசிரியர் உதவியாளர்களுககான கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்


ஆசிரியர் உதவியாளர்களுககான கொடுப்பனவை

அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்



தோட்டப்புற பாடசாலைகளிலும் நாட்டின் ஏனைய பாடசாலைகளிலும் சேவையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் ஆறாயிரம் ரூபா கொடுப்பனவு பத்தாயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
 வாழ்க்கை செலவை கருத்திற் கொண்டு இந்த கொடுப்பனவை அதிரிக்க கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

 பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்ட தொகையை ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment