Saturday, April 29, 2017

மலையில் மோதிய விமானம் பயணம் செய்த அனைவரும் பலி!


மலையில் மோதிய விமானம்

பயணம் செய்த அனைவரும் பலி!

கியூபாவில் இராணுவ விமானம் ஒன்று மலையில் மோதி விபத்துக்குள்ளானதால், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கியூபாவில் சனிக்கிழமை காலை Aerogaviota என்ற விமானம் Baracoa என்ற விமானநிலையத்தில் இருந்து காலை 6.38 மணிக்கு புறப்பட்டுள்ளது.
விமானம் அங்கிருந்து சுமார் 50 மைல் சென்றவுடன், விமானத்தில் இருந்து கிடைக்கும் சிக்னல் தொடர்பை இழந்துள்ளது.
அதன் பின் விமானம் அங்கிருந்த மலை மீது விபத்துக்குள்ளானது என்பது தெரியவந்துள்ளது.
விமானத்தில் இருந்த அனைவரும் அதாவது 8 பேர் பலியாகியுள்ளதாகவும், அதில் இராணுவ வீரர்களும் இருந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.



No comments:

Post a Comment