Thursday, June 1, 2017

நாட்டில் சில பிரதேசங்களில் நாளை கடும் மழை பெய்யும் காலநிலை அவதான நிலையம் தெரிவிப்பு


நாட்டில் சில பிரதேசங்களில்

நாளை கடும் மழை பெய்யும்

காலநிலை அவதான நிலையம் தெரிவிப்பு



நாட்டில் சில பிரதேசங்களில் நாளைய தினம் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
விசேடமாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில்  75 மில்லி மீற்றர் அளவிலான கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன், மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல மாகாணங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

தேவேளை மழை பெய்யும் போது, நாட்டில்  மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்றும் காலநிலை அவதான நிலையம் இன்று நண்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment