Saturday, July 29, 2017

இளைஞர் யுவதிகள் தொழில்வாய்ப்புக்கான விண்ணப்பங்களை ஒளிநாடாவாக இணையத்தளத்தில் சேர்த்துக்கொள்ள வசதி


இளைஞர் யுவதிகள்

தொழில்வாய்ப்புக்கான விண்ணப்பங்களை

ஒளிநாடாவாக இணையத்தளத்தில்

சேர்த்துக்கொள்ள வசதி



இளைஞர் யுவதிகளுக்கு தமது தொழில்வாய்ப்புக்கான விண்ணப்பங்களை தயாரித்து இணையத்தளத்தில் ஒன்றிணைப்பதற்கான வசதிகள் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் தற்போது நடைபெறும் 77 மறுமலர்ச்சிக்கு 40 ஆண்டுகள் நிறைவு கண்காட்சி திடலில் செய்யப்பட்டுள்ளன.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் வசந்த கருணாரத்ன இதுதொடர்பாக தகவல் தருகையில்,
இளைஞர் யுவதிகளுக்கு தமது தொழில்வாய்ப்புக்கான விண்ணப்பங்களை தயாரித்து இணையத்தளத்தில் ஒன்றிணைப்பதற்கான சந்தர்ப்பம் இநத கண்காட்சித் திடலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இவர்களின் கல்வித் தகைமை, ஆற்றல் தொடர்பாக நவீன ரீதியிலான ஒளிநாடாவைத் தயாரித்து அதனை இணையத்தளத்தில் சேர்த்துக் கொள்ள முடியும்.

உலகம் முழுவதிலும் உள்ள வேலைகொள்வோரினால் இதனை பார்வையிட முடியும் என்றும் இளைஞர் யுவதிகளுக்கு நேரடியாக தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment