Thursday, August 31, 2017
Wednesday, August 30, 2017
ஏ.எச்.எம்.அஸ்வரின் ஜனாஸா நேற்று மாலை நல்லடக்கம்
ஜனாஸா நல்லடக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மறைந்த அமைச்சர் முஸ்லிம் சமுகத்திற்கு செய்த சேவைகள் மற்றும் அவரது பணிகள் தொடர்பாக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் அனுதாபச் செய்தியில் தெரித்தார்.
ஜனாஸா நல்லடக்கத்திற்கு முன்னர் நேற்று காலை அமைச்சரின் வீட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாகச் சென்று தனது அனுதாபங்களை அவரின் குடும்பத்தாருக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோரும் ஜனாதிபதி அவர்களுடன் இதன்போது இணைந்துகொண்டனர்
மியான்மரில் வெடித்துள்ள இனமோதலில்100க்கும் மேற்பட்டமுஸ்லிம்கள் படுகொலை
ராக்கைன் மாநிலத்தில் ரோகிஞ்சா முஸ்லிம்களை பாதுகாக்கும் நோக்கத்தில் ரோகிஞ்சா கிளர்ச்சியாளர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ரோகிஞ்சா கிளர்ச்சியாளர்கள், ராக்கைன் மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட பொலிஸ் சோதனைச் சாவடிகள் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் 12 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பௌத்த மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது.
இராணுவத்தினரும் ரோகிஞ்சா மக்கள் மீது இயந்திரத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்திவருகின்றனர். இதில் 92 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பெரும்பாலானவர்கள் ரோகிஞ்சா கிளர்ச்சியாளர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது.
அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ள நிலையில் மியான்மரை விட்டு ரோகிஞ்சா முஸ்லிம்கள் வெளியேறி வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் உயிருக்கு பயந்து கிட்டதட்ட 9000 ரோகிஞ்சா முஸ்லிம் மக்கள் மியான்மரை விட்டு தப்பியோடி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மியான்மரில் நிலவும் மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்ட ஐ.நா, மியான்மர் அரசு நடத்தும் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டு மக்களை பாதுகாக்கும் படி ஆங் சான் சூ கீ தலைமயைிலான மியான்மர் அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவை அசைத்த வங்கதேசம்: வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது!
டாஸ் வென்று, பேட்டிங் தெரிவு செய்த வங்கதேசம், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 260 ஓட்டங்கள் எடுத்தது. அதன் பின்னர் களமிறங்க ஆஸ்திரேலியா, வங்கதேச சுழற்பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல், 217 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேசம் தரப்பில் அனுபவ வீரர், ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் அபாரமாகப் பந்து வீசி, 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அதன் பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேசம், 221 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 265 ஓட்டங்களை நிர்ணயித்தது வங்கதேசம்.
அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ரென்ஷா மற்றும் கவாஜா ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தாலும், ஸ்மித் மற்றும் வார்னரின் பொறுப்பான ஆட்டத்தினால் அந்த அணி நல்ல நிலையில் இருந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வார்னர், சதமடித்து, பின்னர் ஆட்டமிழந்தார். இந்நிலையில், இன்று காலை வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் மீண்டும் ஆஸ்திரேலியா அணியைத் தனது பந்துவீச்சால் திணறடித்தார். சிறப்பாகப் பந்து வீசி, ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். இறுதியில், அந்த அணி 244 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
வங்கதேசம், டெஸ்ட் போட்டியில் முதன் முறையாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, வங்கதேச அணிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Tuesday, August 29, 2017
முன்னாள் அமைச்சர் அஸ்வர் காலமானார்
செங்கோலுடன் கழிவறைக்கு ஓடிய உறுப்பினர்! அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட மூலம் தென் மாகாண சபையில் 27 வாக்குகளால் தோல்வி
அத்துடன், சந்தன பிரியந்தவை மேலும் சில உறுப்பினர்கள் பின் தொடர்ந்து சென்றனர். எவ்வாறாயினும், சில உறுப்பினர்கள் இணைந்து செங்கோலை மீண்டும் சபைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து, சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 12ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அரசியலமைப்பின் 20வது திருத்த சட்ட மூலம் இன்றைய தினம் தென் மாகாண சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், அது 27 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
குறித்த சட்ட மூலம் மாகாண சபைகளின் அங்கீகாரத்துக்காக நாடாளுமன்றினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தென் மாகாண சபையில் குறித்த சட்டமூலம் தோல்வியடைந்துள்ளது.
இந்த சட்ட மூலம் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் படுத்தும் 27 பேர் சட்ட மூலத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த சட்ட மூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது முதலமைச்சர் சான் விஜேலால் சில்வா மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சபையில் இருக்க வில்லை
எனக்கும் லஞ்சம் கொடுக்க வந்தார்கள் [Political Gossip]
இதுதான் ஆரம்பம்.இதனுடன் தொடர்புபட்ட இன்னும் பலர் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படவுள்ளனர்.
இந்த ஊழலுடன் தொடர்புபட்ட பேர்பேச்சுவல் நிருவனத்தின் உரிமையாளர் அர்ஜுன ஆலோசியஸ் ரவி கருணாநாயக்கவுக்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொடுத்ததுபோல் ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள இன்னும் பலருக்கு பணம் மற்றும் காணி போன்றவற்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளாராம்.
குடும்பத்தில் உள்ள வேறு நபர்களின் பெயரில்தான் இந்தச் சொத்துக்கள் உள்ளனவாம்.ஜேவிபி இவற்றைத் தேடுகிறதாம்.இந்த நிலையில்,ஆலோசியஸ் ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கும் லஞ்சம் வழங்க முற்பட்டமையை அறிய முடிந்துள்ளது.
அதாவது,மத்திய வங்கி பிணை முறி தொடர்பான கோப் அறிக்கையை வலுவிழக்கச் செய்யும் வகையிலேயே அதில் ஐ.தே.க உறுப்பினர்கள் அடிக்குறிப்பிட்டனர்.இந்த அடிக்குறிப்பை இட வைத்தவர் ஆலோசியஸ்தானாம்.
இதற்காக ஒவ்வொருவருக்கும் அவர் இரண்டு லட்சம் ரூபா லஞ்சம் வழங்கியதோடு ரஞ்ஜன் ராமநாயக்காவுக்கும் வழங்க முற்பட்டாராம்.ஆனால்,அவர் வழங்க மறுத்துவிட்டாராம்.
அண்மையில்,நிகழ்வு ஒன்றில் ரன்ஜனும் ஜேவிபியின் வட மத்திய மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்கவும் சந்தித்துக்கொண்டனர்.ஊழல்கள் தொடர்பில் அவர்கள் பல விடயங்களை பேசிக்கொண்டனர்.அப்போது ரஞ்ஜன் மேற்படி சம்பவத்தை வசந்த சமரசிங்கவிடம் கூறி இருக்கின்றார்.
ஆனால்,யார் யார் இவ்வாறு பணம் பெற்றார்கள் என்ற விவரத்தைக் கூறவில்லையாம்.
அப்போ,,இன்னும் நிறைய நம்பிக்கை இல்லா பிரேரணைகளைக் காணலாம்போல.
[எம்.ஐ.முபாறக் -சிரேஷ்ட ஊடகவியலாளர்]
Monday, August 28, 2017
86 கொலைகள் செய்த ஆண் நர்ஸ் ஜெர்மனியில் அதிரவைக்கும் சம்பவம்
சிங்கப்பூர் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக செப்டம்பர் 23-ம் திகதி தேர்தல்
![]() |
(இடமிருந்து வலம்) சாலே மரிக்கான், ஹலிமா யாக்கோப், பரித் கான்) |