Wednesday, September 6, 2017

விளையாட்டு பயிலுனர் விண்ணப்பதாரிகள் நேர்முக பரீடசைக்கு கடிதங்கள் தாமதம் 08.09.2017 பரீட்சைக்கு சமூகமளிக்க முடியும்

கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு நியமிக்கபட இருக்கும் 3850 விளையாட்டு பயிலுனர்களுக்கு தற்போது நேர்முக பரீட்சை கல்வி அமைச்சில் நடைபெற்று வருகின்றது. இவ்வாறான நிலையில் இதற்கு விண்ணபித்த விண்ணபதாரிகளுக்கு நேர்முக பரீட்சை தினத்திற்கு பின்னர் கடிதங்கள் கிடைக்க பெற்றுள்ளதாக எங்களுக்கு முறைபாடுகள் கிடைக்க பெற்றுள்ளன. இதனால் இவர்களுக்கு கடித்தில் குறிபிட்டிருந்த ஆவணங்களுடன் சமூகம் தர முடியாமல் போயும் உள்ளது. இவ்வாறு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு 08.09.2017 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெறும் நேர்முக பரீடசைக்கு தோற்ற முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில் குறிப்பாக மலையகம் உட்பட வடக்கு மற்றும் கிழக்கு கஸ்ட பகுதி விண்ணப்பதாரிகளுக்கு கடிதங்கள் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. காரணம் தபால் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதமும் அதி கஸ்ட பிரசேங்கள் என்பதால் ஆகும். எனவே இவர்களுக்கும் உரிய சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கபட்டுள்ளது. எனவே இச் சந்தர்பத்தை விண்ணபதாரிகள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவும். மீண்டும் ஒரு தினம் வழங்கபடமாட்டாது என இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கூறினார்.

பா.திருஞானம்

No comments:

Post a Comment