Monday, September 4, 2017

பொகவந்தலாவை சமுத்திரவள்ளி தோட்டப்பாதை 15 இலட்சம் ரூபாய் நிதியில் புனரமைப்பு


பொகவந்தலாவை சமுத்திரவள்ளி தோட்டப்பாதை

15 இலட்சம் ரூபாய் நிதியில் புனரமைப்பு

பா.திருஞானம்


பொகவந்தலாவை சமுத்திரவள்ளி தோட்டப்பாதையின் ஒரு பகுதி பாதையைச் செப்பனிடுவதற்கு 15 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார கொள்கைகள் அமைச்சின் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் ஊடாக 10 இலட்சம் ரூபாவும் மலையக புதிய கிராமங்கள் இ உட்கட்டமைப்பு வசதிகள் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 5 இலட்சம் ரூபாவும் இந்தப்பாதை புனரமைப்புக்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப்பாதை திறப்பு விழாவின் பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்தலைவரும் இராஜாங்க கல்வியமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாகவும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உப இணைதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன்

மலையக தொழிலாளர் முன்னனியின் நிதி செயலாளர் எஸ். விஸ்வநாதன்பனிப்பாளர் எம் கனகராஜ்¸ நிர்வாக செயலாளர்  எஸ். அஜித்குமார்.  முன்னனியின் பிரதி பிரதி பொது செயலாளர் ஏம் பிரசாந்  உட்பட  தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.






No comments:

Post a Comment