Saturday, September 30, 2017

சிறு பிள்ளைகளுடன் ஒரே வகுப்பில் பாடம் கற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க !


சிறு பிள்ளைகளுடன் ஒரே வகுப்பில் பாடம் கற்ற

பிரதமர் ரணில் விக்ரமசிங்க  !

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று சிறு பிள்ளைகளுடன் ஒன்றாக இணைந்து ஒரே வகுப்பறையில் பாடம் கற்ற செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம் மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் இணைந்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகபடுத்தி வைக்கும் நிகழ்வு நேற்று பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அங்கு மாணவர்களுடன் இணைந்து பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பாடம் கற்றுள்ளனர்.

இலங்கையின் அனைத்து பாடசாலைகளுக்கும் இந்த தொழில்நுட்பத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.




No comments:

Post a Comment