Tuesday, October 31, 2017

புதிய தேர்தல் முறையூடாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்­த­மானியில் கைச்­சாத்­தி­ட்டார் பைஸர் முஸ்­தபா.!


புதிய தேர்தல் முறையூடாக நடத்துவதற்கு 

தீர்மானிக்கப்பட்டுள்ள

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான

வர்த்­த­மானியில் கைச்­சாத்­தி­ட்டார் பைஸர் முஸ்­தபா.!


புதிய தேர்தல் முறை­யூ­டாக நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தலில் சற்றுமுன்னர் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்­சி ­மன்ற அமைச்சர் பைஸர் முஸ்­தபா கைச்­சாத்­தி­ட்டார்.

அவ்­வர்த்­த­மானி அறி­வித்­தலில், ஒவ்­வொரு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­னதும் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளன. அத்­துடன் இழு­பறி நிலை­யி­லி­ருந்த அம்­ப­க­முவ மற்றும் நுவ­ரெ­லியா உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும்  தீர்வு காணப்­பட்­டுள்­ளது. எனவே குறித்த உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை தலா மூன்று உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளாகப் பிரித்­துள்­ள­துடன் அதுவும் இன்­றைய வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.


24 மணிநேரத்துக்கு மிக கனமழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை


24 மணிநேரத்துக்கு மிக கனமழை

 வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

பெரும்பாலான பகுதிகளில் இன்று 150 மி.மீ இற்கும் அதிகமான மிககனமழை எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை எச்சரித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, வடமேல், மேல் மாகாணங்களிலும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும், இன்று கடுமையான மழை பொழியும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
24 மணிநேரத்துக்குள் 150 மி.மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னல் தாக்கத்தில் இருந்து பாதிப்புகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
நாட்டில் தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சிலதினங்கள் தொடரும் சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய , சப்ரகமுவ , மேற்கு ,ஊவா ,வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சியும், ஏனைனய சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சியும் 24 மணித்தியாளங்களில் பதிவாகக்கூடும் .
கடும் காற்றின் காரணமாக கடற்பிரதேசம் கொந்தளிப்புடன் காணப்படும். கடற்றொழிலாளர் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்றுவீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


இன்று முதல் 25ஆயிரம் ரூபா வாகனத்தண்டப்பண சட்டம் நடைமுறை


இன்று முதல் 25ஆயிரம் ரூபா

வாகனத்தண்டப்பண சட்டம் நடைமுறை




25ஆயிரம் ரூபா வாகனத்தண்டப்பண சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவிப்பு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் வெளியிடப்பட்டுள்ளது.
போதையில் வானத்தை செலுத்துதல் காப்புறுதி சான்றிதழ் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தை செலுத்துதல் , ரயில் கடவைகளில் கவனயீனமாக வாகனங்களை செலுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு இந்த தணடப்பணம் விதிக்கப்படவுள்ளது.
அதேபோன்று, வயதுகுறைந்த சிறுவர்கள் வாகனங்களை செலுத்துவதில் ஊக்குவிக்கப்படும் பட்சத்தில் அதற்காக 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்படவுள்ளது.

இந்த தண்டப்பண முறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கை சாய்ந்தமருதில் தொடரும் ஹர்த்தால்


தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கை

சாய்ந்தமருதில் தொடரும் ஹர்த்தால்
               
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்கு தனியான உள்ளூராட்சி சபையை அமைக்குமாறு கோரி சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஹர்த்தால், கடையடைப்பு, வீதி மறியல் போராட்டம் போன்ற நடவடிக்கைகள் நேற்று (31) இரண்டாவது நாளாக இடம்பெற்றது .
நீதிமன்றத்தின் தடையுத்தரவையடுத்து வீதிமறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்ட போதும், ஹர்த்தால் இன்றும் தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நிருவாகிகள் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச சிவில் அமைப்புக்கள், இளைஞர் இயக்கங்கள் இணைந்து இப்போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன.
சாயந்தமருதில் உள்ளூராட்சி சபையை வேண்டி நடத்தப்பட்டு வருகின்ற ஹர்த்தால் போராட்டம் நேற்று(31) வீதிமறியல் போராட்டமாக உருவெடுத்திருந்தது.
அதனை விலக்கிக்கொள்ளுமாறு அங்கு வந்த பொலிஸ் உயரதிகாரிகள் வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்கு இணங்கவில்லை.
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் பிரகடணப்படுத்தும் வரை மறியல் போராட்டத்திலிருந்து ஒரு அடியேனும் பின்வைக்கமாட்டோம். நாங்கள் நியாயத்துக்காக போராடுகிறோம். எங்களது போராட்டத்தை தடை செய்யாதீர்கள் வேண்டுமானால் எங்களை கைதுசெய்து சிறையில் அடையுங்கள் என சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாயலின் தலைவர் வை.எம்.ஹனிபா அம்பாறை பிராந்திய எஸ்.எஸ்.பி. யிடம் தெரிவித்திருந்தார்.
தங்களது கோரிக்கை இன்று நேற்று முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல, இது யாருக்கும் எதிரானதும் அல்லஎமது மக்களின் நியாயமான கோரிக்கையை பெற்றுக் கொடுப்பதற்கு பொலிஸாரும் ஒத்துழைக்க வேண்டும்.
தீர்வு கிடைக்கும்வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை எதிர்காலத்தில் மேலும் இப்போராட்டம் வலுப்பெறும் என்றும் பள்ளிவாயல் தலைவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
அதனால் பொலிஸார் நீதிமன்றத்தில் தடையுத்தரவைப் பெற்றுக்கொண்டு அதனை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கொடுத்தனர். அதன்பின்னர் நேற்று இரவு வீதிமறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இருப்பினும் இன்று அங்கு ஹர்த்தால் கடையடைப்பு போராட்டம் தொடருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று ஹர்த்தால் போராட்டம் புதுவடிவம் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் நேற்று இரு வேளை தொழுகையை வீதியிலேயே நடத்தினர்.
மூன்று தினங்களாக நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தை அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகள் குறிப்பாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதி அமைச்சர் பைஸல் காசீம், எம்.ஐ.எம்.மன்சூர் உட்பட எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் சந்தித்து மக்களது கோரிக்கைகளுக்கு செவிமடுக்கவில்லை. இதனால் சாய்ந்தமருது மக்கள் கடுமையாக ஆத்திரமடைந்துள்ளனர்.
சாய்ந்தமருது பிரதேசம் தற்போது கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இருந்து வருகிறது. சாய்ந்தமருது பிரதேசத்தில் 30, 442 குடிமக்கள் வசித்து வருவதுடன் 19, 032 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் சாய்ந்தமருது மக்கள் உறுதி


தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்

சாய்ந்தமருது மக்கள் உறுதி



சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்கு தனியான உள்ளூராட்சி சபையை அமைக்குமாறு கோரி சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஹர்த்தால், கடையடைப்பு, வீதி மறியல் போராட்டம் போன்ற நடவடிக்கைகள் நேற்று (31) இரண்டாவது நாளாக இடம்பெற்றது .

சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நிருவாகிகள் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச சிவில் அமைப்புக்கள், இளைஞர் இயக்கங்கள் இணைந்து இதனை ஒழுங்கு செய்திருந்தன.

நேற்றைய ஹர்த்தால் நடவடிக்கையின்போது சாய்ந்தமருது ஜும் ஆப்பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் இளைஞர்களும், பொதுமக்களும் கறுப்புத் துணியால் தமது வாய்களை கட்டிக்கொண்டு வீதி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். வீதி மறியல் போராட்டம் வன்முறையாக மாறாதிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். நேற்றும் பாடசாலைகள், அரச நிறுவனங்கள், வங்கிகள், சந்தைகள் இயங்கவில்லை. சகல கடைகளும் பூட்டப்பட்டிருந்தன.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் நேற்று இரு வேளை தொழுகையை வீதியிலேயே நடத்தினர்.

இரண்டு தினங்களாக நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தை அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகள் குறிப்பாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்தும் செய்யும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் சந்தித்து மக்களது கோரிக்கைகளுக்கு செவிமடுக்கவில்லை. இதனால் சாய்ந்தமருது மக்கள் கடுமையாக ஆத்திரமடைந்துள்ளனர்.

சாய்ந்தமருது பிரதேசம் தற்போது கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இருந்து வருகிறது. சாய்ந்தமருது பிரதேசத்தில் 30, 442 குடிமக்கள் வசித்து வருவதுடன் 19, 032 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடையடைப்பு, ஹர்த்தால் நடவடிக்கைகள் மூன்றாவது நாளாக இன்றும் இடம்பெறுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வீதி மறியல் போராட்டம் இடம்பெற்றதையடுத்து அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் சம்பவம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கினர்.

இதற்கிடையே கல்முனை பொலிஸார் கல்முனை நீதிமன்றத்தில் வீதி மறியலுக்கெதிராக தடையுத்தரவு ஒன்றையும் பெற்றனர்.

எவ்வாறாயினும் சாய்ந்தமருது முழு இளைஞர்களும், வயோதிபர்களும், வீதியில் திரண்டு அரசியல் தலைமைகளுக்கெதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குளிரூட்டிகளில் ஒன்பது பேரின் உடல் பாகங்கள்! பொலிஸார் விசாரணை


குளிரூட்டிகளில் ஒன்பது பேரின் உடல் பாகங்கள்!

பொலிஸார் விசாரணை

ஜப்பானில், ஒன்பது பேரின் துண்டாடப்பட்ட உடல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேற்படி உடல் துண்டங்கள் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டோக்கியோவை அடுத்துள்ள ஸாமா என்ற நகரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
23 வயதான இளம் பெண் இம்மாத முற்பகுதியில் காணாமல் போயிருந்தார். இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் பேரில் விசாரணை நடத்தியபோது, கைது செய்யப்பட்ட நபருடன் காணாமல் போன இளம்பெண் ஒரு குடியிருப்புப் பகுதிக்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்தக் குடியிருப்பில் உள்ள சந்தேக நபரின் வீட்டை பரிசோதனையிட்டபோதே விவரம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 27 வயதுடைய சந்தேக நபரின் வீட்டில் ஒன்பது குளிரூட்டிகள் காணப்பட்டதாகவும், அவற்றில் ஒன்பது பேரின் உடல் பாகங்கள் துண்டாடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்தவர் சந்தேக நபரா அல்லது கொலைகாரர்களுக்கு உதவியவரா, கொலைகளுக்குக் காரணம் என்ன என்பன குறித்து பொலிஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.






மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி அமெரிக்காவில் சம்பவம்!


மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி

அமெரிக்காவில் சம்பவம்!

அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் லோயர் மன்ஹாட்டன் பகுதியில் மேற்கு நெடுஞ்சாலையில் உள்ள பாடசாலை அருகில் பொதுமக்கள் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் லாரி ஒன்றை வேகமாக ஓட்டி வந்தார். அந்த பாதையில் நடந்து கொண்டிருந்த மக்கள் மீது மோதினார். மேலும், தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அப்பகுதியில் நடமாடியவர்கள் மீது சரமாரியாக சுட தொடங்கினார்எனத் தெரிவிக்கப்படுகின்றது.
 இந்த திடீர் துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியானதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக தகவலறிந்த பொலிஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை மடக்கி பிடித்தனர். அவரை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது கோழைத்தனமான தாக்குதல் என மன்ஹாட்டன் மேயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி வெள்ளை மாளிகை நிர்வாகம் கேட்டுள்ளது.

இது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கலாமாக என்ற கோணத்தில் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சமீப காலமாக தீவிரவாத அமைப்பினர் வாகனங்களில் வந்து அப்பாவி மக்கள் மீது ஏற்றியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மன்ஹாட்டனில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நியூயார்க் பொலிஸாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எனது நிர்வாகம் செய்து தரும். அவர்களுடன் இணைந்து செயல்படவும் தயாராக உள்ளோம். இதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


மேலும், இதுதொடர்பாக டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், .எஸ்..எஸ். தீவிரவாதிகளை மீண்டும் இங்கு அனுமதிக்க விடமாட்டோம் என பதிவிட்டுள்ளார்.