Monday, October 2, 2017

மியன்மார் அகதிகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றச்சாட்டி கைது செய்யப்பட்ட சிங்கள ராவய அமைப்பின் தேரர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியலில்


மியன்மார் அகதிகளுக்கு இடையூறு விளைவித்ததாக

குற்றச்சாட்டி கைது செய்யப்பட்ட

சிங்கள ராவய அமைப்பின் தேரர் உள்ளிட்ட

இருவருக்கு விளக்கமறியலில்





மியன்மார் அகதிகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றச்சாட்டி கைது செய்யப்பட்ட சிங்கள ராவயவின் தேரர் உட்பட இருவரையும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதீமன்ற பிரதான நீதவான் மொஹமட் வஹப்தீன் இன்று(02) உத்தரவிட்டார்.
கடல்மார்க்கமாக இலங்கைக்கு வந்த மியன்மாரைச் சேர்ந்த 30 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் நீதிமன்றத்தின் உத்தரவின்படி கல்கிசையில் உள்ள வீடொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் தங்கியிருந்த வீட்டுக்கு முன்னால் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன  தயாரத்ன தேரர், அரம்பேல ரத்னசார தேரர் ஆகியோரை இன்று  தெமட்டகொடையில் உள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
கல்கிஸையில் கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான அத்து மீறல் தொடர்பிலான விசாரணைகளுக்க அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர  தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் இன்று நண்பகல் சிங்கள ராவய அமைப்பின் தேரர் உட்பட இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment