Sunday, October 1, 2017

பெண்களுக்கு சாரதி பயிற்சிப் பாடசாலையை திறக்க சவூதி பல்கலைகழகம் முடிவு


பெண்களுக்கு சாரதி பயிற்சிப் பாடசாலையை திறக்க

 சவூதி பல்கலைகழகம் முடிவு



சவூதி அரேபியாவில் பெண்களுக்கு சாரதி பயிற்சி பாடசாலையை திறக்க சவூதி பல்கலைகழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமிய நாடான சவூதிஅரேபியாவில்ஷரியத்சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990-ம் ஆண்டுகளில் இருந்தே பெண்கள் உரிமை சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மீறி கார் ஓட்டிய  பெண்கள் கைது செய்யப்பட்டனர். அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை சவூதி அரேபிய அரசு நீக்கியுள்ளது. அதை தொடர்ந்து வருகிற 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்துள்ளது.


இந்த நிலையில் சவூதி அரேபிய அரசு, பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை நீக்கியதை தொடர்ந்து சவூதி பல்கலைகழகம் பெண்களுக்கு சாரதி பயிற்சி பாடசாலை திறக்கப்படும் என அறிவித்துள்ளது. இளவரசி நொரா பல்கலைக்கழகம் பெண்களுக்காக சாரதி பயிற்சி பாடசாலையை திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment