Tuesday, October 31, 2017

எல்லோரா குகைகளை பார்வையிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த!


எல்லோரா குகைகளை பார்வையிட்ட

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த!

மஹாராஷ்டிராவுக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளை சென்று பார்வையிட்டதாக மஹாராஷ்டிர முதலமைச்சர் அலுவலகத்தின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் பெருமளவான இலங்கையர்கள் அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளுக்கு சுற்றுலா செய்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிர மாநில முதவமைச்சர் தேவேந்மிர பட்நவாஸை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் சந்தித்துள்ளார்.
முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை என்பன உள்ளிட்ட விடயங்கள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, நட்பு நாடான இலங்கையின் கடந்த கால அபிவிருத்தி குறித்தும் மஹாராஷ்டிர முதலமைச்சர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






No comments:

Post a Comment