Wednesday, November 1, 2017

வீறு கொண்ட இளைஞர்களால் அதிகாரத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளின் கொடும்பாவிகள் எரிப்பு! பிரதி அமைச்சர் ஒருவரின் அலுவலகத்தை நோக்கியும் கல்வீச்சு சாய்ந்தமருதில் சம்பவம்


வீறு கொண்ட இளைஞர்களால்

அதிகாரத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளின்

கொடும்பாவிகள் எரிப்பு!

பிரதி அமைச்சர் ஒருவரின்

அலுவலகத்தை நோக்கியும் கல்வீச்சு

சாய்ந்தமருதில் சம்பவம்

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைமையில் மூன்று நாள் கடையடைப்பு மற்றும் வீதி மறியல் போராட்டத்தின் இறுதி நாளான நேற்று 2017-11-01 ஆம் திகதி பள்ளிவாயல் முன்னால் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் அல்லாஹு அக்பர் முழக்கத்துடன்  பிரகடனம் ஒன்று வாசிக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் அங்குதிரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் மத்தியில் வீறு கொண்ட இளைஞர்கள் அதிகாரத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளின் கொடும்பாவிகளை எரித்து அவர்களுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினர்.
  பிரதி அமைச்சர் ஒருவரின் சாய்ந்தமருது வீட்டுக்கும், அலுவலகத்திற்கும்  பாதுகாப்புக்கு இருந்த பொலிஸாரை நோக்கியும் கல்வீச்சு இடம்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

பிரதி அமைச்சரின் அலுவகத்திற்கு முன் தொங்கவிடப்பட்டிருந்த பதாதையும் அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டிருப்பதாகவும் காரியாலயம் மூடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





No comments:

Post a Comment