Monday, January 1, 2018

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி நாளை மறுநாள் சிறப்பு அறிக்கையை வெளியிடுகிறார் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு


ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை

ஜனாதிபதி நாளை மறுநாள் சிறப்பு

அறிக்கையை வெளியிடுகிறார்

அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு



மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுநாள் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார். ஜனாதிபதி செயலகம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி விற்பனையில் முறைகேடு இடம்பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க மூன்று உறுப்பினர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த 30ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கை தொடர்பாகவே  ஜனாதிபதி நாளை மறுநாள் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment