Tuesday, January 2, 2018

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நியமனப்பத்திரம் தாக்கல்செய்தபோது ஒருசில இடங்களில் எமக்கு சறுக்கல்கள் மு.கா.தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக

நியமனப்பத்திரம் தாக்கல்செய்தபோது

ஒருசில இடங்களில் எமக்கு சறுக்கல்கள்

மு.கா.தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு



உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நியமனப்பத்திரம் தாக்கல்செய்தபோது ஒருசில இடங்களில் எமக்கு சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
குருணாகல் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெளிவுபடுத்தும் கூட்டம் அண்மையில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறியிருப்பதாவது;

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த தேர்தலில் பல வகைகளில், வித்தியாசமாக நான்கு கட்சிகளில் போட்டியிடுகிறது. உள்ளூராட்சி தேர்தலானது ஆட்சி, அதிகாரத்தில் இருக்கின்றவர்களின் செல்வாக்கை உரசிப்பார்க்கின்ற ஒரு முக்கியமான உரைகல்லாக அமையப்போகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment