Saturday, March 31, 2018

புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் இன்று முதல் அமுல்


புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம்
இன்று முதல் அமுல்



புதிய உள்நாட்டு இறைவரி சட்டம் New Inland Revenue Act   இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.
இது தொடர்பாக நிதி மற்றும் ஊடகத்;துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவிக்கையில், வரி செலுத்தக்கூடியவர்களுக்கு கூடுதலான அழுத்தத்தை ஏற்படுத்தி குறைந்த வருமானத்தைக் கொண்ட மக்களால் எதிர்கொள்ளக்கூடிய வரிச் சுமையை குறைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக நாட்டின் வருமானம் வீழ்ச்சி கண்டிருந்தது. இதனால் கூடுதலான வட்டியின் கீழ் உள்நாட்டுஇவெளிநாட்டு நிறுவனங்களினால் கடன்களைப் பெற்று அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தது. இலங்கையின் வருமானமும் அதிகரித்தபோதிலும்இ அதற்கு அமைவாக வரி மூலமான வருமானம் சமீப காலத்தில் அதிகரிக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாட்டில் வரிமூலமான வருமானம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. நாட்டில் வரியைச் செலுத்தக்கூடிய அனைவரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும். இதற்கேற்ற வகையில் புதிய சட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 80சதவீதத்திற்கும்இ 20 சதவீதத்திற்கும் உள்ள நேரடி மற்றும் மறைமுக வரி மூலமான வருமானம் 60க்கும் 80 சதவீதத்திற்கும் இடைப்பட்டதாக முன்னெடுப்பதே புதிய சட்டத்தின் இலக்காகும். 2020 ஆம் ஆண்டளவில் இந்த இலக்கை வெற்றி கொள்வதற்கு இறைவரி திணைக்களம் தற்பொழுது திறைசேரியுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

கூட்டு எதிரணியின் மிகமுக்கிய பிரமுகர் ரணிலை கவிழ்க்க உதவமாட்டார்?


கூட்டு எதிரணியின் மிகமுக்கிய பிரமுகர்
ரணிலை கவிழ்க்க உதவமாட்டார்?


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது, ஹிந்த ராஜபக்வின் தலைமையிலான கூட்டு எதிரணியைச் சேர்ந்த மிக முக்கிய பிரமுகர் ஒருவர் அதில் பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இதன்போதே, கூட்டு எதிரணியின் மிக முக்கிய பிரமுகர் நாட்டில் தங்கியிருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த தகவலை வெளியிட்டுள்ள ஆங்கில நாளிதழ், அந்த மிக முக்கிய பிரமுகரின் பெயரை வெளியிடவில்லை.
கூட்டு எதிரணியின் நம்பிக்கையில்லா பிரேரணையில் முன்னாள் ஜனாதிபதி ஹிந்த ராஜபக் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கல்முனை மாநகர சபையின் முதல் அமர்வை பகிஷ்கரிக்குமா? சாய்ந்தமருது சுயேட்சைக்குழு


கல்முனை மாநகர சபையின்
முதல் அமர்வை பகிஷ்கரிக்குமா?
சாய்ந்தமருது சுயேட்சைக்குழு



கல்முனை மாநகர சபையின் முதலாவது அமர்வும், மாநகர முதல்வர் தெரிவும் எதிர்வரும் 02.04.2018 திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதில் எத்தரப்பினர் ஆட்சி அமைப்பது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதிலும் தனியான உள்ளூராட்சி மன்றத்தை முன்னிலைப்படுத்திய சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவினர் இந்த முதல் அமர்வில் கலந்துகொள்வது சாதகமானதா அல்லது பாதகமானதா என்கின்ற ஒரு கேள்வியை இங்கு எழுப்பியிருக்கின்றது.
12 ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றிருக்கின்றது. இதில் வெற்றி பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மொத்தம் 10பேராவர். இவர்களை முன்னிறுத்தி முஸ்லிம்களின் ஆட்சி அமைய வேண்டிய தேவை இங்கு இருக்கின்றது. அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -07, தமிழர் விடுதலைக்கூட்டணி -03 .தே. சார்ந்த -02 சுயேட்சைக்குழு ஒரு உறுப்பினர் உட்பட 13 தமிழ் பிரதிநிதித்துவங்கள் இங்கு உள்ளது.
ஏற்கனவே அறிவித்ததற்கிணங்க சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் 09 பேரும் எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை என்கின்ற அடிப்படையில் அவர்கள் முதல் அமர்வில் கலந்துகொண்டால் ஒரு சங்கடமான நிலைக்கு தள்ளப்படக்கூடும். எவ்வாறெனில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருவரை மேயராக நிறுத்துகின்ற அதேநேரம், தமிழர் தேசியக் கூட்டமைப்பும் இன்னுமொருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தலாம்.
அந்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்ந்த 05 முஸ்லிம் உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளரை ஆதரித்தார்களேயானால் முஸ்லிம் முதல்வர் தெரிவாகுவது இலகுவாக அமைய முடியும். அவ்வாறில்லாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் இடையே இருக்கின்ற அரசியல் போட்டித்தன்மையின் காரணமாக சிலவேளை அவர்களும் ஒருவரை தமது கட்சி சார்பில் முதல்வராக முன்னிறுத்தலாம்.
அப்படி முன்னிறுத்துவதென்பது சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவின் 09 உறுப்பினர்களை கருத்தில்கொண்டே பிரேரிக்கக்கூடிய வாய்ப்பு தோன்றும்.
இத்தகைய இக்கட்டான நிலையை தோற்றுவிப்பதிலிருந்து விலகுவதற்கும் மு.கா.வும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து முஸ்லிம் ஆட்சியை நிலைப்படுத்துவதற்கு இருக்கின்ற சரியான ஒரு தெரிவு சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவினர்கள் இந்த முதல் அமர்வை பகிஷ்கரிப்பதேயாகும்.
இங்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்ந்த ஒரு உறுப்பினரை பிரதி முதல்வராகவும், வேறு ஒருவருக்கு மாநகர சபையின் நிலையியல் குழுவில் பிரதிநிதித்துவமும் மற்றும் மருதமுனை சார்ந்த சுயேட்சைக்குழு பிரதிநிதிக்கு நிலையியல் குழுக்களில் அங்கத்துவத்தை வழங்கியும் மொத்தமாக 16 முஸ்லிம் உறுப்பினர்கள் இணைந்து ஆட்சியமைக்க முடியும்.
சிலவேளை தேசிய காங்கிரஸ் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகளும் தலா ஒவ்வொருவராக மூன்று பேரும் மு.கா.வின் முஸ்லிம் முதல்வர் வேட்பாளரைச்ச் ஆதரித்து தமது வாக்குகளை பிரயோகிப்பார்கள் அல்லது வாக்களிப்பில் இருந்து ஒதுங்கிக்கொள்வர்.
தேவையேற்படின் இம்மூன்று உறுப்பினர்களுக்கும் கூட மாநகர சபை நிலையியல் குழுக்களில் அங்கத்துவ அந்தஸ்த்தை வழங்கியும் இணைத்துக்கொள்ள முடியும். அரசியல் போட்டித்தன்மை காரணமாக இம்மூன்று பேரும் முஸ்லிம் தரப்பு முதல்வரை ஆதரித்துக்கொள்ளாவிட்டாலும் சமூக உணர்வின் அடிப்படையில் தமிழ் முதல்வரை தெரிந்துகொள்வதற்கு வாக்களிக்கத் துணியமாட்டாகள் என்ற நம்பிக்கையை அவர்கள் மீது நாம் வைக்கலாம்.
சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவினர்கள் சமூகமளித்து வாக்களிப்பில் கலந்துகொள்ளாது தவிர்த்துக்கொண்டாலும் அவர்களின் அந்தச் செயற்பாட்டை பிழையானது என காண்பிப்பதற்காக வேறு எத்தனங்கள் அங்கு முன்னெடுக்கப்படலாம். அந்த நேரத்தில் இவர்கள் ஒரு தடுமாற்ற நிலையை அடைந்து வாக்களிக்க வேண்டிய ஒரு நிர்பந்தம் ஏற்படுமானால், இவர்களது தேர்தல் கால கோஷங்கள் அனைத்தும் அர்த்தமற்றதாகிவிடும்.
ஏனெனில், சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை அமைவதற்கு எத்தரப்பினர்களின் வாக்குறுதிகளையும் நம்பக்கூடிய எந்தச் சூழலும் இன்று வரை இல்லாததன் காரணமாகவும், இந்த அமர்வுக்கு முன்னர் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்துக்குரிய பிரகடனத்துக்கான எந்த முகாந்திரமும் இல்லை என்பதினாலும் இக்குழுவினர்கள் வாக்களிப்பிலிருந்து விலகியே இருக்க வேண்டியதன் கட்டாயம் இருப்பதினால் முதல் அமர்வை பகிஷ்கரிப்பதுவே தமது எண்ணத்திற்கும், நோக்கத்திற்கும் இன்றும் நாளையும் பாதுகாப்பு அரணாக அமைய முடியும்.
முதல் அமர்வுக்குச் சென்று தவறிழைத்தால் அது எந்த சூழலிலும் நிவர்த்திக்க முடியாததும் , தீராத பழியையும் சுமக்க வேண்டிய வரலாற்றுத் தவறுக்கு உட்படுத்துமென்பதை நமது அவதானத்திலிருந்து விலத்திவிட முடியாது. சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவினரின் பங்குபற்றுதல் சிலவேளை கோரத்தைகூட்டநடப்பெண்ணை பூர்த்தியாக்கிவிடும். இதிலிருந்தும் நாம் ஒதுங்குவதற்கும் ஒரே வழி முதல் அமர்வை பகிஷ்கரிப்பதேயாகும்.
நூறுல் ஹக்

ஏப்ரல் முட்டாள்கள் தினம்


ஏப்ரல் முட்டாள்கள் தினம்


ஏப்ரல் முதலாம் திகதி உலகம் முழுவதும் உத்தியோகப்பற்றற்ற முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் முதலாம் திகதி என்றவுடன் முட்டாள்கள் தினம் என்று அனைவரையும் ஏமாற்றுகிறோம்.
இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.
16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.
எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.
புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்பிரல் மாதம் முதல் திகதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.
1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

செயற்பாட்டு ரீதியான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரிசையில் அனுரகுமார திஸாநாயக்க தொடர்ந்தும் முதலிடத்தில்


செயற்பாட்டு ரீதியான நாடாளுமன்ற
உறுப்பினர்களின் வரிசையில்
அனுரகுமார திஸாநாயக்க தொடர்ந்தும் முதலிடத்தில்


நாடாளுமன்றத்தில் செயற்பாட்டு ரீதியான நாடாளுமன்ற உறுப்பினராக இம்முறை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
manthri.lk என்ற இணையத்தளம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளம் வருடாந்தம் நடத்தும் இந்த கருத்து கணிப்பில் அனுரகுமார திஸாநாயக்கவே தொடர்ந்தும் முதலிடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கருத்து கணிப்பின் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்தக பத்திரன இரண்டாம் இடத்தில் உள்ளார்.
மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் உள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ஆறாம் இடத்தில் உள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக ஏழாம் இடத்தில் உள்ளார்.
அதேவேளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்த 8ஆவது இடத்திலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் 9ஆவது இடத்திலும் உள்ளனர்.
இதற்கு அடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன அவருக்கு அடுத்ததாக ரவி கருணாநாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் 12ஆவது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இடம்பெற்றுள்ளார்.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில்  முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் 31ஆவது இடத்திலும்  முஹம்மத் முஜிபுர்ரஹ்மான் 33 ஆவது இடத்திலும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 42 ஆவது இடத்திலும்  அமைச்சர் பைஸர் முஸ்தபா 47 ஆவது இடத்திலும்  எஸ்.எம்.மரிக்கார் 49 ஆவது இடத்திலும்   அமைச்சர் கபீர் ஹாசீம் 61 ஆவது இடத்திலும் 
எம்.எம்.ஏ.மஹ்றூப் 64 ஆவது இடத்திலும்   அலிசாஹீர் மெளலான  83 ஆவது இடத்திலும்  அப்துல் ரஹ்மான் இஸ்ஹாக் 95 ஆவது இடத்திலும் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் 116  ஆவது இடத்திலும்  இம்றான் மஹ்றூப் 128 ஆவது இடத்திலும்  எம்.எச்.எம்.சல்மான் 129 ஆவது இடத்திலும்  பைஸல் காசீம் 143 ஆவது இடத்திலும்  ஏ.எச்.எம்.பெளஸி 144 ஆவது இடத்திலும்  அமீர் அலி சிஹாப்தீன் 151 ஆவது இடத்திலும்   காதர் மஸ்தான் 153 ஆவது இடத்திலும்  எம்.ஐ.எம்.மன்சூர் 164 ஆவது இடத்திலும்  அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் 167 ஆவது இடத்திலும்  எச்.எம்.எம்.ஹரீஸ் 175 ஆவது இடத்திலும்  எம்.எஸ்.தெளபீக் 216 ஆவது இடத்திலும்  உள்ளனர்.