Friday, March 2, 2018

அதிக பிள்ளைகளை பெற்ற தாய்க்கு பண உதவி


அதிக பிள்ளைகளை பெற்ற தாய்க்கு பண உதவி


மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் சமூக சேவை பிரிவினால் அதிக பிள்ளைகளை பெற்ற தாய்க்கு பண உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச முதியோர் தின அனுஸ்டானத்தினை முன்னிட்டு இந்த பண உதவி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் வைத்து இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்..சி.நஜிமுதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மேலும் செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்..எல்.றியாஸ் மற்றும் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க வீதியில் வசிக்கும் 88 வயதுடைய எம்.எல்.வெள்ளாட்சி உம்மா என்பவர் பதினைந்து பிள்ளைகளைப் பெற்றுள்ளார்.
இதனடிப்படையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட எம்.எல்.வெள்ளாட்சி உம்மா என்பவருக்கு 25000 ரூபாய்க்கான காசோலையினை பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் வழங்கி வைத்துள்ளார்.


No comments:

Post a Comment