Thursday, March 29, 2018

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை சித்தி பெறாத மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை



கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை
சித்தி பெறாத மாணவி
கிணற்றில் குதித்து தற்கொலை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியான நிலையில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியை சோ்ந்த மாணவி ஒருவா் எதிர் பார்த்த சித்தி கிடைக்கவில்லை என தற்கொலை செய்துகொண்டுள்ள சோக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு - கைவேலி பகுதியில் இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயை பிரிந்த சாந்தலிங்கம் அனுசியா என்ற மாணவி எதிர்பாா்ப்புடன் கல்வி கற்று பரீட்சை எழுதியபோதும் நேற்று வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் தான் எதிர்பாத்த பெறுபேறு கிடைக்கவில்லை என இன்று காலை கிணற்றில் குதித்து தனது உயிரை மாய்துள்ளார்.
முல்லைத்தீவு வள்ளிபுனம்  உயர்தர வித்தியாலயத்தில் கல்வி கற்று பரீட்சை எழுதிய கைவேலி மருதமடு வீதியை சேர்ந்த சாந்தலிங்கம் அனுசியா என்ற மாணவியே இவ்வாறு தனது உயிரை மாய்த்துள்ளார்.



No comments:

Post a Comment