Thursday, March 29, 2018

ஒரே பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேலாகக் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் கடிதங்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைப்பு


ஒரே பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேலாகக்
கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு  இடமாற்றம்
கடிதங்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைப்பு


நாடெங்கிலுமுள்ள தேசிய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இடமாற்றங்களுடன் தொடர்புடைய கடிதங்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பாடசாலைகளில் தரம் ஆறு தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புக்களில் கல்வி கற்பிக்கும் மூவாயிரத்து 766 ஆசிரியர்கள் தொடர்பான கடிதங்கள் நேற்று கையளிக்கப்பட்டன. ஒரே பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய ஆசிரியர்கள் இடமாற்றம் பெறுகிறார்கள்.
இதேவேளை, தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெறுவதற்கான கால எல்லைக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குமாறு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
58ம் 59ம் வயது எல்லைக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு இந்த சலுகை கிடைக்கவுள்ளது.
ஒரே தேசிய பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேலாக தரம் ஆறுக்கும் பதினொன்றுக்கும் இடைப்பட்ட வகுப்புக்களில் கற்பித்த ஆசிரியர்களுக்கான இடமாற்றத்தில் அவர்களின் விருப்பத்திற்கு அமைய உரிய பாடசாலையில் கற்பிக்க இடமளிக்குமாறு அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment