Thursday, May 3, 2018

ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி உட்பட இருவருக்கும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல்


ஜனாதிபதிசெயலகத்தின் பிரதானி உட்பட இருவருக்கும்
எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல்



இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரின் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலணி பிரதானி, குசும்தாச மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், பீ.திஸாநாயக்க ஆகியோரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் இன்று (04) உத்தரவிட்டுள்ளார்.
கந்தளாய் சீனித் தொழிற்சாலையில், இந்திய வர்த்தகரொருவர் வாங்கிய பங்குகளை அதிகரிப்பதாக வாக்குறுதியளித்து, அவரிடமிருந்து இலஞ்ச சமாக 20 மில்லியன் ரூபாயை பெறும் போதே, இவர்கள் இருவரும் நேற்று (03) கைது செய்யப்பட்டனர்.


No comments:

Post a Comment