கிளிநொச்சி
மாவட்ட அபிவிருத்திக்கென
விசேட
குழு அமைக்கப்படும்
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க
கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திக்காக விசேட குழுவொன்று
அமைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மக்களின் காணிப்பிரச்சனைகள் மாத்திரமன்றி அபிவிருத்தி
செயற்பாடுகள் தொடர்பிலும் இதன் மூலம் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்புக் கிடைக்கும்;
கிளிநொச்சி மாவட்ட
செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற
மீளாய்வுக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்.
கிளிநொச்சி மாவட்ட பட்டதாரிகளின் பிரச்சனைகளுக்கும் தீர்வு
வழங்கப்படவுள்ளது. இதன்போது மழை நீரை சேமித்து அதனை பயன்படுத்துவதற்கான
வேலைத்திட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment