Saturday, June 30, 2018

சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல்


சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல்




அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு எதிராக சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும் சம்மாந்துறையை வாழ்விடமாகவும் கொண்டுள்ள உதுமான் கண்டு நாபீர் என்பவர் விமர்சித்திருப்பது சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போன்றுதான் உள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்டு இந்த நாட்டின் அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களில் ஒருவராக இருந்து கொண்டு பலவருடங்களாகச் சேவையாற்றிக்கொண்டிருக்கும்  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் சேவைகளை இதுவரை பிரதேச சபைக்குக் கூட மக்களால்  தெரிவு செய்யப்பட முடியாத வெறும் உதுமான் கண்டு நாபீர் விமர்சிப்பது என்பது ஒரு நகைப்புக்குரிய விடயமாகவே எமக்கெல்லாம் தெரிகின்றது.
 உதுமான் கண்டு நாபீர் அவர்கள் சிலருக்கு சாப்பாடு கொடுப்பது இன்னும் சில சில்லறை உதவிகளைச் செய்துவிட்டு அரசியலுக்கு வந்துவிடலாம் என்று பகல் கனவு காண்பதின் வெளிப்பாடே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு எதிரான உளறுதல் என்பதை விடயம் தெரிந்த பலர் அறிந்திருந்தும் உதுமான் கண்டு நாபீர் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பது பரிதாபத்திற்குரிய விடயமாகும்.
இதோ முக நூல் நண்பர்களின் அவர் தொடர்பான் சில பதிவுகள்.
அல் ஹபிழ் அஸாம் அப்துல் அஸீஸ்
இன்று
எதிர்பாராத விதமாக
ஒரு சந்திப்பு
நாபிர் 
என்னிடம் சொன்னார்
எதிர் வரும் தேர்தலில் SLMC சார்பாக
முதன்மை வேட்பாளராக தன்னை நிறுத்துவதற்கு பிராந்திய தலைமைகள் யோசிப்பதாக கூறினார்.
இக் கருத்தை SLMC போராளிகள்
கேள்விப்பட்டால் என்ன நடக்கும் என்று நா பிரிடம் கேட்டேன்
யோசித்தார்

Ahamed Lebbe Junaideen காலத்திற்கும் சிந்தனையற்ற சமுதாயத்திற்கும் ஏற்றால்போல் தலைவர்கள் உருவாக வேண்டாமா? அந்தவகையில் SLMC சார்பாக
முதன்மை வேட்பாளராக அவரை நிறுத்துவதற்கு பிராந்திய தலைமைகள் யோசிக்கின்றார்கள்போல் தெரிகின்றது. அல்லாஹ்தான் எமது முஸ்லிம் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவேண்டும். இதுபோல் இன்னும் எத்தனையோ அதிசயங்களை நாம் கேட்கத்தான் போகின்றோம். பார்க்கத்தான் போகின்றோம். நல்லவர்கள் படித்தவர்கள் சமுதாய சிந்தனையுள்ளவர்கள் சமுதாயத்தில் புறந்தள்ளப்பட்டிருப்பதன் வெளிப்பாடே இவ்வாறானவர்கள் வெளிப்படுகின்றார்கள். இப்படியான கதைகளை முஸ்லிம் சமுதாயம் கேட்க வேண்டியுள்ளது.
 Mahsoom Ismail எல்லா நாம்பனும் வாலை கிழப்புதென்று 
வயிற்று நாம்பனும்
வாலை கிழப்பினதாம்

Hussain Ashraff இலுப்பையில ஏறியதாம் மொடப் பேய்
2


Nagoor Ariff ஆமாம். இன்று ஜும்மாத் தொழுதுவிட்டு வெளியேறுகையில் என்னிடமும் சொன்னார்.
அவருக்காக கவலைப்படுவதா அல்லது அவரை நினைத்து சிரிப்பதா என்று தெரியாமல், அவருக்கு ஒரு விடயத்தை மிகவும் அழுத்தமாக சொன்னேன். இனிமேலும் எமது மக்கள் ஏமாறுவதற்கு தயாரில்லை என்பதை சொன்னேன்.

E.L. Mohamed Mahroof சகோ.நாபிர் சம்பந்தமான பல பதிவுகளை நானும் பார்க்கின்றேன். அவைகள் அனைத்தும் அவரை அவரே தாழ்த்திக்கொள்வது போன்றே கருத்தாளப்பட்டிருக்கின்றது. அத்துடன் அதற்கான பின்னூட்டங்களில் 98% வீதமானவைகள் அவரை கிண்டலடிப்பதாகவே பதியப்படுகின்றது. இது அவரின் அறிவுக்கு தென்படாதிருப்பது அவரின் அரசியல் பயணத்திற்கு ஆரோக்கியமற்றது.

எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என்ற எச்சரிக்கையால் சிறிலங்கன் விமான சேவை பயணங்கள் தடைப்படும் அபாயம்


எரிபொருள் விநியோகம்

நிறுத்தப்படும் என்ற எச்சரிக்கையால்

சிறிலங்கன் விமான சேவை பயணங்கள் தடைப்படும் அபாயம்



இலங்கையின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கான எரிபொருள் விநியோகத்தை வரும் புதன்கிழமையுடன் நிறுத்தவுள்ளதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.
தமக்கு செலுத்த வேண்டிய சுமார் 14  பில்லியன் ரூபாவில் குறைந்தபட்சம், 1 பில்லியன் ரூபாவை குறித்த காலக்கெடுவுக்குள் வழங்கத் தவறினால், எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என்று  பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.
இதுதொடர்பான முடிவை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், சிவில் விமான, போக்குவரத்து அமைச்சு, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றுக்கும் அறிவித்துள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த முடிவு குறித்து, சிறிலங்கன் விமான சேவை அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், இந்த முடிவினால், விமான சேவைகள் நிறுத்தப்படும் ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு, சிறிலங்கன் விமான சேவை 14 பில்லியன் ரூபாவையும், மின்சார சபை 46 பில்லியன் ரூபாவையும் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.  

7.6 மில்லியன் டொலர்களை மஹிந்தவின் தேர்தல் பரப்புரைக்காக வழங்கியதாக நியூயோர்க் ரைம்ஸ் போட்ட குண்டு இந்த செய்தி ஒரு அரசியல் சூழ்ச்சி, எல்லா குற்றச்சாட்டுகளையும் நான் நிராகரிக்கிறேன். மஹிந்த தெரிவிப்பு


7.6 மில்லியன் டொலர்களை மஹிந்தவின்
தேர்தல் பரப்புரைக்காக வழங்கியதாக
நியூயோர்க் ரைம்ஸ் போட்ட குண்டு
இந்த செய்தி ஒரு அரசியல் சூழ்ச்சி,
எல்லா குற்றச்சாட்டுகளையும் நான் நிராகரிக்கிறேன்.
மஹிந்த தெரிவிப்பு


2015 ஜனாதிபதித் தேர்தலின் போது, ஹிந்த ராஜபக்வின் தேர்தல் பரப்புரைக்காக சீன நிறுவனம் ஒன்று 7.6 மில்லியன் டொலர்களை வழங்கியதாக நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தி பொய்யானது என்று ராஜபக் தரப்பு மறுத்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இதுகுறித்து  விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், நிதிக்குற்றப் புலனாய்வுப்  பிரிவு பொலிஸ் மா அதிபரின் உத்தரவைக் கோரவுள்ளதாக ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நியூயோர்க் ரைம்ஸ் செய்தியை அடிப்படையாக வைத்து, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதையடுத்தே, இந்த விவகாரம் குறித்து எந்த பொலிஸ் பிரிவு விசாரணை நடத்தும் என்பது குறித்து, பொலிஸ் மா அதிபரின் உத்தரவைக் கோரவுள்ளதாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் தம்மிக பிரியந்த தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இதுகுறித்து ஆங்கில வார இதழுக்கு கருத்து வெளியிட்டுள்ள ஹிந்த ராஜபக், “நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒரு அரசியல் சூழ்ச்சி, எல்லா குற்றச்சாட்டுகளையும் நான் நிராகரிக்கிறேன்.
நான் எடுக்க வேண்டிய அடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக சட்டவாளர்களுடன் ஆலோசித்து வருகிறேன்என்று கூறியுள்ளார்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சினூடாக வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்


கைத்தொழில் வர்த்தக அமைச்சினூடாக
வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு
அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்

இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாசவின் வேண்டுகோளின் பேரில் கைத்தொழில் வர்த்தக அமைச்சினூடாக வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு வறக்காப்பொலயில் இன்று (30) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு சிறப்பித்தார்















உகண்டா நாட்டவரிடம் ரூபா 80 இலட்சம் பெறுமதியான 858 நீல மாணிக்கங்கள் மீட்பு


உகண்டா நாட்டவரிடம் ரூபா 80  இலட்சம் பெறுமதியான
858 நீல மாணிக்கங்கள் மீட்பு

உகண்டா நாட்டைச் சேர்ந்த 63 வயது நபர் ஒருவரிடமிருந்து 858 மாணிக்கக் கற்களை மீட்டுள்ளதாக, சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (30) காலை துபாயிலிருந்து கட்டுநாயக்கா விமானம் நிலையம் வந்த விமானத்தில் (EK 652) குறித்த நபரை சோதனையிட்டபோது, அவரிடமிருந்து சிறிய வகை 858 நீல மாணிக்கக்கற்கள் மீட்கப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் பணிப்பாளரும் ஊடக பேச்சாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்ட குறித்த சந்தேகநபர், விசாரணைகளின் பின்னர் ரூபா 30 ஆயிரம் அபராதத் தொகை செலுத்துமாறு பணிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதோடு, மாணிக்கக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, சுங்க திணைக்கள பணிப்பாளர் சுனில் ஜயரத்ன  தெரிவித்துள்ளார்.