Tuesday, July 3, 2018

இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக சிங்கள ராவய முறைப்பாடு?


இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக
சிங்கள ராவய முறைப்பாடு?



சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“2009இற்கு முன்னர், விடுதலைப் புலிகளின் காலத்தில், எப்படி இருந்தோம் என்பதை உணர்வுபூர்வமான உணரும் நிலையில் இருக்கிறோம். நாங்கள் உயிருடன் வாழ வேண்டுமாக இருந்தால், நாங்கள் வீதிகளில் நிம்மதியாக நடமாட வேண்டுமானால், எமது பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்று பாதுகாப்புடன் திரும்ப வேண்டுமாக இருந்தால், வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும்என்று தெரிவித்திருந்தார்
வடக்கு கிழக்கில் விடுதலைப்புலிகளின் கை ஓங்க வேண்டும் என, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment