Friday, August 31, 2018

அவுஸ்ரேலியாவில் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர் அமைச்சர் ஒருவரின் மருமகனாம்


அவுஸ்ரேலியாவில் தீவிரவாத குற்றச்சாட்டில்
கைது செய்யப்பட்ட இளைஞர்
அமைச்சர் ஒருவரின்  மருமகனாம்


                                                
அவுஸ்ரேலியாவில் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொகமட் நிசாம்டீன், அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகன் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்ரேலியாவில் .எஸ் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்தவரின் தாக்குதல் இலக்குப் பட்டியலில் அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர்கள் இருவர் இடம்பெற்றிருந்தனர் என்று அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மொகமட் நிசாம்டீன் என்ற 25 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த இளைஞன், சிட்னியில் கைது செய்யப்பட்டார்.
கலாநிதிப் படிப்புக்காக அவுஸ்ரேலியா சென்ற இவர் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தகாரராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று கென்சிங்டனில், தீவிரவாத முறியடிப்பு கூட்டு பிரிவினால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவருக்கு பிணை மறுக்கப்பட்டதுடன், விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திக்கு,



No comments:

Post a Comment