Saturday, September 29, 2018

ஈராக்கில் மாடல் அழகியை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்


ஈராக்கில் மாடல் அழகியை 
சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்

ஈராக்கின் பிரபல மாடல் அழகியை பாக்தாத்தில் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது கொலைக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இவரது ஸ்டைலான வாழ்க்கை முறை தீவிரவாதிகளுக்கு பிடிக்க வில்லை. கொலை மிரட்டல் விடுத்து வந்தனர்.
இவரது சொந்த ஊர் பாக்தாத். ஆனால் அங்கு வசிக்காமல் குர்திஸ்தானில் தங்கியிருந்தார். எப்போதாவது தான் பாக்தாத் செல்வார். இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாக்தாத் சென்று இருந்தார்.
அப்போது அவரை சில தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டனர். அதில் 3 குண்டுகள் அவரது உடலில் பாய்ந்தது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இவரது கொலைக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவற்றை பதிவு செய்துள்ளனர்.




No comments:

Post a Comment