Friday, September 28, 2018

சுபக புலமைப் பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது


சுபக புலமைப் பரிசில் திட்டத்திற்கான
விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது


கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சுபக புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் புலமைப்பரிசில்கள் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கலை, விளையாட்டு, புதிய கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் விசேட திறமைகளினாலும் இயலுமையினாலும் உலகை வெற்றிக் கொள்ள முயற்சிக்கும் மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
2018 ம் ஆண்டில் கல்வி பொது தராதர உயர்தர கல்வியை தொடரும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.இதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 5ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சின் இணையதளமான http://www.moe.gov.lk/ இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.


No comments:

Post a Comment