Thursday, November 29, 2018

மைத்திரி - கரு இன்று சந்திப்பர்



மைத்திரி - கரு இன்று சந்திப்பர்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடையே இன்று (29) மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது.

கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபகஸ நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்தை மையப்படுத்தியே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சந்திப்பில் அரசியல் நெருக்கடி குறித்து தீர்க்கமான பேச்சுக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள நிலையில், கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ பெரும்பான்மை உடைய தரப்புக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment