Thursday, November 29, 2018

மட்டக்களப்பில் இரு பொலிஸார் இன்று காலை சடலங்களாக மீட்பு!


மட்டக்களப்பில் இரு பொலிஸார்
 இன்று காலை சடலங்களாக மீட்பு!




மட்டக்களப்பு- வவுணதீவில் பொலிஸ் சோதனைச் சாவடியில்  இரண்டு பொலிஸார் இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வவுணத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமை செய்யும் தினேஸ்,பிரசன்னா ஆகிய பொலிஸ்காரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இனம்தெரியாத நபர்கள் இவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை நடத்த பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார் என்று பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.







No comments:

Post a Comment