Monday, December 31, 2018

கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சையின் தரச்சான்றிதழ்களை இன்று முதல் பெற்றுகொள்ளலாம்’


கல்விப் பொதுதராதர  உயர்தர பரீட்சையின்
தரச்சான்றிதழ்களை
இன்று முதல் பெற்றுகொள்ளலாம்


கல்விப் பொதுதராதர  உயர்தர பரீட்சையின் தரச்சான்றிதழ்கள் இன்று 1 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக, பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம், சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வியை தொடருவதற்கமைய, இந்த தரச்சான்றிதழ்களை இன்று முதல் விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த தரச்சான்றிதழ்களை ஒருநாள் சேவையின் மூலமாகவும் பெற்றுகொள்ள முடிவதோடு, இதற்காக 600 ரூபாய் கட்டணம் அறவிடப்படுமென்றும், மேலதிக பிரதி தேவைப்படின், அதற்கு 350 ரூபாய் கட்டணமும் அறவிடப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment