Wednesday, December 26, 2018

கல்முனை மாநகரசபை உறுப்பினர் ரஹ்மத் மன்சூரின் முயற்சியினால் பள்ளிவாசல்களுக்கு நீர் தாங்கிகள் வழங்கிவைப்பு


கல்முனை மாநகரசபை உறுப்பினர் ரஹ்மத் மன்சூரின்
முயற்சியினால் பள்ளிவாசல்களுக்கு
நீர் தாங்கிகள் வழங்கிவைப்பு

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர் மன்சூரின் மகனும் கல்முனை மாநகரசபை உறுப்பினரும் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர் நகரதிட்டமிடல் நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரிடம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இறக்காமம் மற்றும் வரிப்பத்தன்சேனை ஆகிய ஊர் பள்ளிவாசல்களில் நிலவுகின்ற நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் நீர்தாங்கி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை கிராமப்புற நீர்வழங்கல் திட்ட காரியாலயத்தில் வைத்து பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் இதனை கையளித்துள்ளார்.
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் உயர்கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுவரும் 1000 லீற்றர் ஒரே தடவையில் கொள்வனவு செய்யக்கூடிய நீர்தாங்கிகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.






No comments:

Post a Comment