Saturday, December 1, 2018

“ அம்பாறை மாவட்டக் குரல்’(VOICE OF AMPARAI DISTRICT) எனும் பெயரில் அமைப்பு ஒன்று அங்குரார்ப்பணம்


அம்பாறை மாவட்டக் குரல்(VOICE  OF AMPARAI DISTRICT)
எனும் பெயரில்
அமைப்பு ஒன்று அங்குரார்ப்பணம்

அம்பாறை மாவட்டத்தில் (VOICE  OF AMPARAI DISTRICT) “ அம்பாறை மாவட்டக் குரல் எனும் பெயரில்  அமைப்பு ஒன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது.
சமூக, பிரதேச அபிவிருத்தியில் அக்கறை கொண்ட அம்பாறை மாவட்டத்திலுள்ள ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள் சாய்ந்தமருதில் இன்று டிசம்பர் 1 ஆம் திகதி சனிக்கிழமை ஒன்று கூடி இந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
எந்த அரசியல் கட்சியையும் சார்ந்திராமல் மாவட்டத்திலுள்ள மக்கள் பிரச்சினைகளை உரியவர்களிடம் முன்வைப்பதும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்காக நடுநிலையாக இருந்து குரல் கொடுப்பதுமே இந்த அமைப்பின் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டக் குரல்எனும் இந்த  அமைப்பின் தலைவராக சாய்ந்தமருதைச் சேர்ந்த கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் கே.எல்.அபூபக்கர்லெவ்வை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த  அமைப்பின் செயலாளராக நற்பிட்டிமுனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.அப்துல் கபூர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பொருளாலராக சாய்ந்தமருதைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விரிவுரையாளர் எம்.எம்.எம்.மஹ்றூப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த  அமைப்பின் ஏனைய நிர்வாக சபை உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
உப தலைவர்: அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பளர் ஏ.உமர்லெவ்வை.
உப தலைவர்:   நிந்தவூரைச் சேர்ந்த நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் மெளலவி ஏ.எல்.இமாம்.
உப தலைவர்:   சாய்ந்தமருதைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிரதேசக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.ஜப்பார்.
உப தலைவர்:   நிந்தவூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.இஸ்மாயில்.
உப தலைவர்:   பாலமுனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் எம்.எல்.எம்.பாறூக் (பாலமுனை பாறூக்).
உப தலைவர்:   கல்முனையைச் சேர்ந்த பிரதேச உத்தியோகத்தர் ஏ.எல்.ஏ.மஜீத்.
உதவி செயலாளர்:   மருதமுனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.எல்.ஏ.ஜலால்தீன்.
உதவி செயலாளர்:   கல்முனையைச் சேர்ந்த சிரேஸ்ட நூலகர் ஏ.பி.மன்சூர்.
 உதவி செயலாளர் (நிர்வாகம்):     அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் ஐ.ஏ.ஜப்பார்.
உதவி செயலாளர் (சட்டம்):   சாய்ந்தமருதைச்சேர்ந்த  சட்டத்தரணி என்.எம்.முஹைதீன்.
செய்தி தொடர்பாளர்:  சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஓய்வு பெற்ற வங்கி பிரதி முகாமையாளருமான ஏ.எல்.ஜுனைதீன்.
நிர்வாக சபை உறுப்பினர்: சமாந்துறையைச் சேர்ந்த இளைஞர் சேவை அதிகாரி எம்.டி.எம்.ஜவ்பர்.
கணக்காய்வாளர்:   பொத்துவிலைச் சேர்ந்த எஸ்.ஏ.சி.கலந்தர்.
கணக்காய்வாளர்:  வரிப்பத்தான்சேனையைச் சேர்ந்த யூ.எல்.நதீர்.
ஒருங்கிணைப்பாளர்:   ஒலுவிலைச் சேர்ந்த இலங்கை போக்கு வரத்து சபை உத்தியோகத்தர் ஏ.எல்.ஏ.லத்தீப்.





No comments:

Post a Comment