Thursday, January 31, 2019

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது



இலஞ்சம் பெற்ற அதிபர் கைது



இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஹொரவப்பொத்தானை பிரதேச பாடசாலையொன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தரம் 6 இற்கு மாணவர் ஒருவரை சேர்ப்பது தொடர்பில் ரூபா 5,000 பணத்தை இலஞ்சமாக பெற்ற வேளையில், ஹொரவப்பொத்தானை, ருவன்வெலி மத்திய மகா வித்தியாலய அதிபர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நடவடிக்கைக்கு ரூபா 10,000 இலஞ்சமாக கோரிய நிலையில், அதில் ரூபா 5,000 இனை குறித்த மாணவனின் தந்தையிடம் முற்பணமாக பெற்ற வேளையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment