Thursday, February 28, 2019

10 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது


10 கோடி ரூபாய் பெறுமதியான
போதைப் பொருளுடன் ஒருவர் கைது

மோட்டார் சைக்கிளில் 10 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்ற ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல் மாவட்டத்தில் உள்ள குளியாப்பிட்டி - ஹெட்டிபொல வீதியின் கும்புறுபொல சந்தியில் வைத்து சந்தேக நபரை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குளியாப்பிட்டிய, நாகொல்லாகொட அம்பகமகும்புர பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் போதைப் பொருள் விற்பனையாளருக்கு சொந்தமான இந்த போதைப் பொருளை சந்தேக நபர், எடுத்துச் சென்று விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.




No comments:

Post a Comment