Wednesday, February 27, 2019

இந்திய எல்லையில் பற்றி எரியும் போர் விமானங்கள்


இந்திய எல்லையில் பற்றி எரியும் போர் விமானங்கள்

இந்தியாவின் மத்திய காஷ்மீரின் பட்கம் மாவட்டத்தில் உள்ள கரேண்ட் கலன் பகுதியில் இந்திய விமானப் படை விமானம் விழுந்து நொருங்கியதில் குறைந்தது இரண்டு விமானிகள் பலியாகியுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

காலை சுமார் 10.40 மணியளவில், பட்கம் நகரிலிருந்து 7 கிமீ தூரத்தில், கரேண்ட் கலன் பகுதியில், இந்திய விமானப் படை விமானம் விழுந்து நொருங்கி, தீப்பற்றி எரிந்துள்ளது என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் விமானி மற்றும் துணை விமானி இருவரும் உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது.

சம்பவ இடத்தில் இருந்து இரண்டு விமானிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் கார்கில் பகுதியில் மேலும் ஒரு ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதாகவும் ஆனால், அதிகாரிகள் அதனை உறுதிப்படுத்தவில்லலை எனவும் தெரியவருகின்றது.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்க தயாராக இருந்த விமானங்கள் அமிர்தசரஸுக்கு திருப்பி விடப்பட்டன. இந்திய விமானப் படையின் நடவடிக்கைகளால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.





No comments:

Post a Comment