Tuesday, February 26, 2019

பூச்சாடிகளுக்குள் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது


பூச்சாடிகளுக்குள் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தவர்கள்
போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது

நாத்தான்டிய பனன்கொட பிரதேசத்தில் பூச்சாடிகளை வளர்க்கும் போர்வையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததாக ௯றப்படும் சந்தேக நபர்கள் இருவர் நேற்று (25) மாலை மாரவில போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாரவில போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாத்தான்டிய மற்றும் மாரவில பகுதிகளைச் சேர்ந்த 31, 35வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று, இவ்வாறு பூச்சாடிகளை வளர்க்கும் போர்வையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 1100கஞ்சா செடிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.



No comments:

Post a Comment