Wednesday, May 1, 2019

கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடையில் இன்று இரவு 9.00 மணி முதல் அதிகாலை5.00 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம்


கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடையில்
இன்று இரவு 9.00 மணி முதல்
அதிகாலை5.00 மணி வரை
மீண்டும் ஊரடங்கு சட்டம்




இன்று 1 ஆம் திகதி இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை5.00 மணி வரை கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.
சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி குடியேற்றக் கிரம்த்திலுள்ள வீடொன்றில் தீவிரவாதிகள் என சிலர் இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து பாதுகாப்புப் படையினரின் சுற்றிவளைப்பின்போது தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டிலிருந்து 3 குண்டுகள் வெடித்தன. இதன்போது 6 தீவிரவாதிகள் உட்பட 15 பேர் பலியாகியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து குறித்த பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment