Friday, May 31, 2019

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு


இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் புதுடில்லியில் இன்று (31) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது தடவை பதவிப்பிரமாண நிகழ்வு நேற்று (30) புதுடில்லி நகரின் ராஷ்டரபதி பவனில் மிக கோலாகலமாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள சென்றிருந்த நிலையிலேயே, இந்திய பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்திய பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இந்திய பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியினைப் பெற்று இரண்டாவது முறையாகவும் அந்நாட்டு பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட இந்திய பிரதமர்  நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.






No comments:

Post a Comment