Thursday, May 30, 2019

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி எதிராக உண்ணாவிரதப் போராட்டம் மைத்திரிக்கான அவகாசமும் முடிந்ததாம்!!


அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மாகாண
ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி
எதிராக உண்ணாவிரதப் போராட்டம்

மைத்திரிக்கான அவகாசமும் முடிந்ததாம்!!



அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துலியே ரத்ன தேரர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளார்.

இந்த உண்ணாவிரதத்தை கண்டி தலாத மாளிகை முன்னால் இன்று காலையில் அவர் ஆரம்பித்துள்ளார்.

ஏற்கனவே இதுதொடர்பாக ஜனாதிபதிக்கு கால அவகாசம் வழங்கியிருந்த நிலையில் அந்த அவகாசம் முடிந்தும் தனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்தே அவர் இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.



No comments:

Post a Comment