Thursday, May 30, 2019

பாடம் படிக்காத மாணவனை புல் தின்ன வைத்த ஆசிரியர் பொலிஸார் வழக்குப்பதிவு


பாடம் படிக்காத மாணவனை
புல் தின்ன வைத்த ஆசிரியர்
பொலிஸார் வழக்குப்பதிவு



பாடசாலை ஒன்றில் பாடத்தைப் படிக்காத மாணவனை புல் தின்ன வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லோத்ரான் நகரில் உள்ள பதேபூர் என்ற இடத்தில் அரசு தொடக்கப் பாடசாலை ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையின் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். அப்போது, கஸ்கான் (வயது 7) என்கிற மாணவனை அழைத்து, சக மாணவர்கள் முன்பு நின்று பாடத்தை படிக்கும்படி கூறியுள்ளார். ஆனால் குறித்த மாணவன் பாடத்தை படிக்காமல் நின்றுகொண்டிருந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் வகுப்பறைக்கு வெளியே இருந்து புல், பூண்டுகளை எடுத்து வந்து, கட்டாயப்படுத்தி மாணவனை தின்ன வைத்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், மாணவனின் பெற்றோர், ஆசிரியர் தங்களது உறவுக்காரர் என்றும், இதை தாங்கள் பெரிதுபடுத்தவில்லை என்றும் கூறிவிட்டனர். ஆனாலும் இந்த விவகாரம் மாவட்ட பொலிஸ் அதிகாரியின் கவனத்துக்கு வந்ததும், இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment